Dailyhunt
"பக்தர்களே தீர்மானிக்க வேண்டும்.. நீதிமன்றம் அல்ல!" சபரிமலைக்கு பெண்கள் நுழைவதை எதிர்த்து மத்திய அரசு மனு தாக்கல்..!

"பக்தர்களே தீர்மானிக்க வேண்டும்.. நீதிமன்றம் அல்ல!" சபரிமலைக்கு பெண்கள் நுழைவதை எதிர்த்து மத்திய அரசு மனு தாக்கல்..!

1News Nation 1 week ago

சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த விவகாரம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோயிலுக்குள் நுழைவதைத் தடுக்கும் பாரம்பரிய மத நடைமுறையை ஆதரித்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் விரிவான எழுத்துப்பூர்வ வாதங்களை சமர்ப்பித்துள்ளது.

9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரணைக்கு முன்பாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மூலம் 246 பக்க மனுவை சமர்ப்பித்துள்ளது. இந்த மனு, கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் மனுவில், சபரிமலையில் 10-50 வயதுடைய பெண்கள் நுழைவு தடையானது நூற்றாண்டுகள் பழமையான மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் வேரூன்றியதாக கூறப்பட்டுள்ளது. ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரி என வணங்கப்படுவதால், இந்த நடைமுறை உருவானது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு தீர்ப்பில் பெண்கள் விலக்கல் அத்தியாவசிய மத நடைமுறை அல்ல என உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், அந்த நடைமுறை அத்தியாவசியமா என்பதை அந்த மதத்தை பின்பற்றும் பக்தர்களே தீர்மானிக்க வேண்டும்; நீதிமன்றம் அல்ல என மத்திய அரசு வாதிட்டுள்ளது.

மேலும், இந்த நடைமுறை பெண்களுக்கு எதிரானது அல்ல; கோயிலின் வழிபாட்டு தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கினால், கோயிலின் வழிபாட்டு இயல்பே மாறிவிடும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மத நம்பிக்கை, சடங்குகள் போன்றவை பொது ஒழுங்கு, ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் அடிப்படை உரிமைகளை மீறாத வரையில், அவற்றில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

: ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி சுயநினைவின்றி உள்ளார்.. அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது.. அதிர்ச்சி தகவல்..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: 1News Nation