தொடரும் தங்கத்தின் மீதான முதலீடு
தங்கத்தின் மீதான ஈர்ப்பு மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது.
குறிப்பாக பிறந்தநாள், திருமணம், பண்டிகை காலங்களில் தங்க நகைகள் முக்கிய இடம்பிடிக்கும். எனவே தங்க நகைகளின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதிக்காணப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளில் புதிய புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இது கடந்த 6 வருடத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்றவைத்தது.
தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?
தங்கம் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதில் பங்குச் சந்தையில் சமநிலை இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும் டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் அதிகளவு தங்கங்களை மத்திய வங்கிகள் வாங்கி குவித்தனர் இதுவும் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஏறி இறங்கும் தங்கம் விலை
- 27-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து 14,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,13,840 ரூபாய்க்கு விற்பனை.
- 28-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றிற்கு 130 ரூபாய் குறைந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,12,800 ரூபாய்க்கும் விற்பனை.
- 29-ம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்து, 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து 1,11,200 ரூபாய்க்கு விற்பனை.
- 30-ம் தேதி தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்து 14,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 1600 ரூபாய் அதிகரித்து 1,12,800 ரூபாய்க்கும் விற்பனை

