குஜராத் டைட்டன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பேட்டிங்கில் சொதப்பிய ஆர்சிபி, பந்துவீச்சிலும் குஜராத்தின் அதிரடியை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆல் அவுட் ஆனது
சொதப்பிய பேட்டிங்:
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரஜத் படிதார் ஓரளவிற்கு ரன்களை சேர்த்தாலும், அவர்களால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. அதிரடி மன்னன் டிம் டேவிட் இந்த முறை ரசிகர்களை ஏமாற்றினார்.
ஒரு கட்டத்தில் 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆர்சிபி தத்தளித்தது. இறுதியில் ரோமாரியோ ஷெப்பர்ட், வெங்கடேஷ் ஐயர் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்ததால், பெங்களூரு 150 ரன்களை கடந்தது. கடைசி 4 விக்கெட்டுகளுக்கு அந்த அணி 59 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 155 ரன்களுக்கு பெங்களூரு 'ஆல்-அவுட்' ஆனது.

