முன்னணி திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர் பி செளத்ரி நேற்று உதய்பூரில் கார் விபத்தில் உயிரிழந்தார்.
தந்தையின் இறப்பால் ஜீவா மனமுடைந்து போய் நிற்கும் இந்த நிலையிலும் திமுக ஆதரவாளர்கள் ஜீவா மீது வெறுப்பை காட்டி வருகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றியை ஜீவா விசிலடித்து கொண்டாடிய காரணத்திற்காகவே ஜீவா மீது இந்த விமரனங்கள் வைக்கப்படுகின்றன.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு சொந்தக்காரரனா ஆர்.பி செள்த்ரி நேற்று விபத்தில் காலமானார். தனது தந்தையின் இறப்பு செய்தியை கேட்ட ஜீவா கதறி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜீவா நடித்து கடைசியாக வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கேலி செய்யும் விதமாக 'கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுங்கடா' என்கிற வசனம் இடம்பெற்றிருந்தது. இது திமுக ஆதரவாளர்கள் இடையே கடும் கோபத்தை தூண்டியது. மேலும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை ஜீவா விசிலடித்து கொண்டாடி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதன் காரணமாக தற்போது ஜீவா தனது தந்தையில் இழந்து நிற்கும் தருணத்தில் ஜீவா மீது திமுக ஆதரவாளர்கள் மனிதாபினாமற்ற முறையில் வெறுப்பை வெளிக்காட்டி வருகிறார்கள். கரூரில் 41 பேர் உயிரிழந்ததை ஜீவா தனது படத்தில் கேலி செய்ததின் கர்மாவை தான் அவர் அனுபவிக்கிறார் என ஒருவர் பதிவிட்டுள்ளார். கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா என்கிற வசனத்தை போட்டு ஜீவாவை குறிவைத்து திமுக ஆதரவாளர்களின் பல்வேறு பதிவுகள் வந்தபடி இருக்கின்றன.
Author : ராகேஷ் தாரா

