Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சென்னை விமான நிலையத்தில் இனி டேக்சி பிடிப்பது ரொம்ப ஈஸி! ஆனா சின்ன ஒரு ட்விஸ்ட் இருக்கு... முழு விவரம் உள்ளே!

சென்னை விமான நிலையத்தில் இனி டேக்சி பிடிப்பது ரொம்ப ஈஸி! ஆனா சின்ன ஒரு ட்விஸ்ட் இருக்கு... முழு விவரம் உள்ளே!

ABP Nadu 2 weeks ago

சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் இரண்டாவது டேக்சி (Cab) பயன்பாட்டுக்கான ஏறும் இடம் (Pick-up point) திறக்கப்படுவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இதனைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதன் திறப்பு விழா செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தாமதத்திற்கான காரணங்கள்

விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, இந்த புதிய வசதியை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் திறந்து வைக்க உள்ளனர். அதற்கான நிகழ்ச்சிகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டியுள்ளதால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், வரும் செப்டம்பர் மாதத்திற்கு மேல் இது எந்த சூழ்நிலையிலும் தாமதமாகாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் உள்ள இந்திய விமான நிலையங்களின் ஆணைய (AAI) உயர் அதிகாரிகள், இந்தத் திறப்பு விழாவுக்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் சந்தித்து வரும் அனைத்து நடைமுறைச் சிக்கல்களையும் முழுமையாகத் தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

பயணிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்

இந்த புதிய டேக்சி ஏறும் மையம் செயல்படத் தொடங்கினால், உள்நாட்டுப் பயணிகளை அதிகம் கையாளும T1 முனையத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு டேக்சிகளைப் பிடிப்பது மிகவும் எளிதாகும். அத்துடன், தற்போது T1 முனையத்தில் இயக்கப்படும் 'பக்கி' (Buggy) வாகனங்களை, T2 பன்னாட்டு முனையம் மற்றும் T4 உள்நாட்டு முனையத்திற்குப் பிரித்து அனுப்பி சேவையை அதிகரிக்க விமான நிலைய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பாதசாரிகளுக்கான வசதிகள் சீரமைப்பு

T4 உள்நாட்டு முனையத்தில் இருந்து அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் வரை செல்லும் பாதையின் ஒரு சிறிய பகுதி திறந்தவெளியாக உள்ளது. மழைக்காலங்களில் பயணிகள் நனையாமல் செல்வதற்காக அந்தப் பகுதியில் மேற்கூரை அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடையும் போது, T4 முனையத்திலிருந்து பக்கி வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கும், நடந்து செல்வோர் பாதைக்கும் முழுமையான பாதுகாப்பு வசதிகள் கிடைக்கும்.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu