Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Tamilnadu Heat Wave Alert : அடுத்த 5 நாள்.! சூரியன் சுட்டெரிக்கப்போகுது... எந்த எந்த மாவட்டம்.? வெதர்மேன் எச்சரிக்கை

Tamilnadu Heat Wave Alert : அடுத்த 5 நாள்.! சூரியன் சுட்டெரிக்கப்போகுது... எந்த எந்த மாவட்டம்.? வெதர்மேன் எச்சரிக்கை

ABP Nadu 2 weeks ago

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

மிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவே அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (01-05-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி கன மழை அலர்ட்

மேலும் நாளை (02-05-2026) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

இதனிடையே தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், பல நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, கரூர், தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் தீவிர இடியுடன் கூடிய மழை பதிவாகியுள்ளது. உள்நாடு, தெற்கு மற்றும் மேற்கு தமிழ்நாட்டில் மேலும் மழை எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், வேலூர் – 42.4°C : இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், சென்னை மீனம்பாக்கம் – 40.2°C : இந்த ஆண்டின் முதல் 40°C+ மேல் பதிவாகியுள்ளதாக கூறியுள்ளார். இதே போல சென்னை நுங்கம்பாக்கம் – 38°C : இந்த ஆண்டின் அதிகபட்சம் திருத்தணி – 40.6°C : இந்த ஆண்டின் அதிகபட்சம் நேற்று பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அடுத்த 5 நாட்கள் (மே 5 வரை), வேலூரிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வரை கடும் வெப்பம் நிலவும். அதன் பிறகு வெப்பநிலை குறையும் என அந்த அறிக்கையில் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu