காங்கிரஸ் கட்சியில் சிலர் தங்களது சொந்த நலனுக்காக மட்டுமே செயல்படுவதால் அக்கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.
இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைத்தது. அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்று 3ம் இடம் பெற்றது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய் அதனை இரு கட்சிகளின் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை நாடியுள்ளார். இதில் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நன்றி மறந்து விட்டதாக திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத்திடம் பெரும்பான்மை பலம் இல்லை. அதுதான் இங்கு பிரச்சனையாக உள்ளது. ஆட்சி அமைக்க அவர்களுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போதைய சூழலுக்கு ஆட்சி அமைக்க அவருக்குக் குறைந்தபட்சம் 12 எம்.எல்.ஏ.க்களாவது தேவைப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த பிறகு இப்போது 112 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் 6-7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

