Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 11 வேட்பாளர்கள் போட்டி! இறுதி பட்டியல் வெளியானது

APC News Tamil 5 hrs ago

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேட்புமனு பரிசீலனைக்குப் பிறகு, யாரும் தங்களது மனுவை வாபஸ் பெறாத நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள்

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார்.

திமுக சார்பில் சேதுசெல்வம், காங்கிரஸ் சார்பில் விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சலீம், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திக் குமாரி, இந்திய குடியரசு கட்சி சார்பில் கலைவாணன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இவர்களுடன் 5 சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 16-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளான செப்டம்பர் 19-ம் தேதி யாரும் தங்களது மனுவை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து 11 பேர் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு

தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் என தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் தற்போது தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதி ஏன் காலியானது?

2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் ஆகிய இரு தொகுதிகளிலும் என். ரங்கசாமி வெற்றி பெற்றிருந்தார். பின்னர் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதியும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துவிட்டது” – எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: APC News Tamil