1988-90 காலகட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையில் பணியில் ஈடுபட்டிருந்த போது போராளிகளுக்கும் அமைதிப்டையினருக்கும் இடையில் சிக்கிக் கொண்டு ஒரு திருமண வீட்டார் தவித்த தவிப்புக்களே படத்தின் மையக்கரு.
இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்கள் வாழும் ஒரு கிராமத்தில் நாயகி ரூபா கொடுவாயுரின் திருமணம் முடிவாகிறது.
இந்த நேரத்தில் இலங்கையில் பொராளிகளை அடக்கி ஒடுக்கம் இந்தியாவின் அமைதிப்படை நவீன் சந்திரா தலைமையில் அந்த கிராமத்திற்க வருகிறது.வழி மாறி வரும் இந்த அமைதிப்டையினர் திருமண வீட்டை இரவு வேளையில் சூழ்ந்து கொள்கிறார்கள். அந்த வீட்டில் உள்ளவர்களை பிணையக் கைதிகளாக்கும் அமைதிப்படை வீட்டையே ஒரு ராணுவ முகாமாக மாற்றி விடுகிறார்கள்.
இந்த சூழலில் அமைதிப்டையினர் அங்க இருக்கம் தகவல்கள் கசிந்து அந்த வீட்டைச் சுற்றி போராளிகள் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். அமைதிப்படையினரை தாக்கவும் நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள்.
விடிந்தால் திருமணம் என்ற சூழலில் ஒரு பக்கட் அமைதிப்படையினர் இன்னொரு பக்கம் போராளிகளிடம் சிக்கி குடும்பத்தினர் படும் பரிதவிப்ப சொல்லி மாளாது.
அந்த தமிழ் குடும்பத்தின் கதி என்ன? திட்டமிட்டபடி திரமணம் நடந்ததா? என்பதே மீதி கதை.
இந்திய ராணுவ அமைதிப்டை தலைவராக நவீன் சந்திரா கம்பீரமான நடிப்பில் கலக்கியுள்ளார். ஒரு பக்கம் அதிகாரம் இன்னொரு பக்கம் மனிதாபிமானம் என இருதலைகொள்ளி ஏறும்பாக பரிதவிக்கம் இடங்களில் கவனம் ஈர்க்கிறார்.
திருமணப் பெண்ணாக கலங்கி தவிக்கம் இடங்களில் ரூபா கொடுவாயுர் அசத்துகிறார். போரின் வலி சுமக்கம் பெண்ணாக அவரின் நடிப்பு புதிய பரிமாணங்களைத் தொடுவதாக உள்ளது.
சனந்த், கபிலணுவேணு, ரோகித் கோகடே, விது, சித்து குமரேசன், நவயுகா, சுவாதி கிருஷ்ணன், நமசிவாயம் தம்பிப்பிள்ளை, காயல் வின்சென்ட் உள்ளிட்டோரும் நடிப்பில் அசத்தியுள்ளனர்.
செல்வரத்தினம் பிரதீபனின் ஒளிப்பதிவில் காட்சிகள் உணர்ச்சிபுர்வமாகவும் கே-வின் இசையல் உணர்ச்சிப் பிரவாகமாகவும் நகர்கிறது.
படத்தின் நீளம் குறைவு. பேசியே காட்சிகளை நீட்டிக் கொண்டு இருக்காமல் சொல்ல வந்த கருத்தை சுருங்க சொன்ன விதம் பாராட்டுக்குரியது. யுத்தம் ரத்தம் என்று வழக்கமான போர்க்தையாக இல்லாமல் போருக்கு நடுவில் மக்கள் அனுபவித்த வலியை அழுத்தமாக பதிவு செய்துள்ள இயக்குநர் சோமித்ரனை பாராட்டலாம்.
நீளிரா - தவிப்பு.
