இந்நிலையில் நெல்லூரில் இருக்கும் அரசு இசை மற்றும் நடனப் பள்ளியின் பெயரை டாக்டர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என்று பெயர் மாற்ற ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது என்று அம்மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டை பார்த்த எஸ்.பி.பி.யின் மகன் சரண் ஆந்திர அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சரின் ட்வீட்டை பார்த்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் ரசிகர்களும் தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

