Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும்!

டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும்!

#image_title

மெரிக்க தேர்தல் முடிவுகள் வந்து 4 நாட்களாகியும் அங்கே கலவரம் வெடிக்கவில்லை. ஏன்??? டிரம்ப்புடன் டீல் போட்டுவிட்டதா டீப் ஸ்டேட்??

2016 - 2020 காலக் கட்டத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த போது, அமெரிக்காவில் தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தியது டீப் ஸ்டேட். பிளாக் லைஃப்ஸ் மேட்டர்ஸ் கலவரம் நினைவிருக்கும். பல மாகாணங்கள் தீக்கிரையாயின.

'2024இல் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி ஆனால், மீண்டும் கலவரத்தைத் தூண்டும் டீப் ஸ்டேட்' என்று பலரும் கணித்திருந்தார்கள். என்றாலும், இது வரை எந்த சப்தமும் இல்லை.

வழக்கம் போல சி.என்.என் உள்ளிட்ட ஊடகங்கள் டிரம்ப்புக்கு எதிராக புலம்பி வந்தாலும், அவர்களது வியூவர்ஷிப் ரொம்பவே குறைந்திருக்கிறது. பலரும் மஸ்க்கின் எக்ஸ் பக்கத்தில் வரும் செய்திகளை / பதிவுகளை நம்புகிறார்கள்.

'வாக்காளர் / அடையாள அட்டை தேவையில்லை' என்று சொல்லி, சட்ட விரோத குடியேறிகளையும் வாக்களிக்க வைத்த சில டெமாக்ரட் மாநிலங்களில் மட்டுமே கமலா வென்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

ALSO READ:ஆளுநர் ரவி செய்தது சரியா?

டிரம்ப்பு தேர்தலில் clean sweep செய்திருக்கிறார். Swing state ஏழையும் வென்றிருக்கிறார் டிரம்ப்.

அமெரிக்க மக்கள் பெருவாரியாக ஆதரவளித்ததால் டீப் ஸ்டேட் அடக்கி வாசிக்கிறதா? தேர்தலுக்கு முன்பே வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பல டீப் ஸ்டேட் ஊடகங்கள் கமலாவை எண்டார்ஸ் பண்ணாமல் ஒதுங்கி நின்றது, அவர்கள் மக்களின் தீர்ப்பை உணர்ந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

தேர்தல் முடிவு வந்ததிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள்:

1, டிரம்ப் சொன்னதை ஏற்று, இஸ்ரேல் விரோத கத்தார் அரசு தன் நாட்டிலிருந்த ஹமாஸ் பயங்கரவாத தலைவர்களை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டிருக்கிறது.

2, அதே போல ஈரானும் 'டிரம்ப்பின் அமெரிக்காவுடன் சமரசம் செய்ய தயார்' என்று கூறியிருக்கிறது.

3, டிரம்ப் விரோதக் கருத்துகளைப் பேசி வந்த ஐரோப்பிய ஒன்றியம், சமாதானக் கொடி தூக்கியிருக்கிறது, 'டிரம்ப்பின் அமெரிக்காவிடமிருந்து இனி எரிபொருள் வாங்குவோம்' என்று.

4, ரஷ்யாவின் புட்டின் வழக்கம் போல வரவேற்றிருக்கிறார்.

5, சீனா மௌனம்.

6, தேர்தல் முடிவுகள் வந்ததும் அவர் பேசிய மூன்று தலைவர்கள்: பாரத பிரதமர் மோதி ஜீ, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு, சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான்.

ALSO READ:யுஜிசி விவகாரம்; நீதிமன்றம் செல்வதே சரி என்கிறார் பிரேமலதா விஜயகாந்த்!

7, செலன்ஸ்கிக்கு நோட்டீஸ் கொடுத்தாகிவிட்டது: 'மேற்கொண்டு பணம் தர மாட்டோம். ஐரோப்பாவிடம் வேண்டுமானால் உதவி வாங்கிக் கொள். சமாதானமாகப் போ ரஷ்யாவுடன்'.

8, இது வரை டிரம்ப்புக்கும் பாரதத்துக்கும் எதிராக ஓவராக கம்பு சுத்திய ஹிலரி கிளிண்டன் / கிளிண்டன் ஃபௌண்டேஷன் இனி 'ஆக்டிவ் பாலிடிக்ஸ்' பண்ணப் போவதில்லை என்று செய்தி.

9, ஹிலரியின் செல்லப்பிள்ளை - வங்க தேசத்தின் முகமது யூனுஸ் - வங்க தேசத்தை விட்டு ஓடிவிட்டதாக வதந்திகள் உலவுகின்றன. மண்ட பத்திரம்.

10, என்ன செய்வதென்று தெரியாமல் ரவுன் வின்சி திண்டாட்டம்.

11, 'ஜஸ்டின் டுருடோவின் அப்பன் பியர் டுருடோ இல்லை. ஃபிடல் காஸ்டிரோ தான்' என்று தன் புத்தகத்தில் எழுதிய டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது டுருடோவுக்கு டென்ஷன். தனிக் குழு அமைத்திருக்கிறது டுருடோ அரசு - டிரம்ப் அட்மினுடன் இணைந்து செயல் புரிய. (நீ இனி என்ன பிடுங்கினாலும் பயனில்லை டுருடோ).

12, தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து டீப் ஸ்டேட் கைத்தடி பன்னுன் உள்ளிட்ட காலிஸ்தானிகள் சப்தத்தைக் காணோம்.

ALSO READ:குறைந்த விலை, அதிக கையூட்டு; கரும்பு விவசாயிகள் துயர் துடைக்க வேண்டும்: அன்புமணி இராமதாஸ்!

>>> டிரம்ப் பதவி ஏற்க இன்னும் 2 மாதங்களுக்கு மேல் இருந்தாலும், டிரம்ப்பின் transition team இப்பொழுது முதலே பைடன் அட்மினுடன் வேலை பார்க்க ஆரம்பித்திருப்பதால், பைடன் ஓனர்களான டீப் ஸ்டேட் தன் இஷ்டத்துக்கு அரசின் பாலிஸிகளில் விளையாட முடியாது என்கிறார்கள். எனவே, டிரம்ப் இன்னும் பதவி ஏற்கவில்லை என்றாலும், இப்போதே பாதி ஜனாதிபதி தான் என்று தோன்றுகிறது. அதனால் தான் உலகத் தலைவர்கள் பலரும் பைடனுடன் பேசாமல் டிரம்ப்புடன் பேசிவருகிறார்கள்!!!

டியர் டிரம்ப், அந்த காலிஸ்தானி பயல்களை சிறையில் அடைக்கவும். நன்றி.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari