Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கள்ளழகருக்குச் சென்ற ஆண்டாள் மாலை!

கள்ளழகருக்குச் சென்ற ஆண்டாள் மாலை!

ண்டாள் சூடிய மாலையை கள்ளழகருக்குச் சாற்றுவது ஒரு பாரம்பரிய வழிபாடு. மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அழகருக்கு சாற்றுவது வழக்கம்.

இந்த ஆண்டு, மே 12-ம் தேதி அழகருக்கு நடக்கும் சிறப்பு அலங்காரத்துக்காக, முந்தைய நாளான இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து மாலை கொண்டு செல்லப்பட்டது.

இந்த வழக்கத்தின் படி, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை கள்ளழகருக்கு சாற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, அழகருக்கு சாற்றுவதற்காக, ஆண்டாள் சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை மதுரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அழகருக்கு மாலை சூட்டி கொடுக்கும் ஆண்டாளுக்கு, அழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளும் போது அணிந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை பரிசாக வழங்கப்படும்,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari