Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சபரிமலையில் விஷு பண்டிகை: கனி கண்ட பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம்!

சபரிமலையில் விஷு பண்டிகை: கனி கண்ட பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம்!

கேரளா சபரிமலையில் விஷு பண்டிகை: கனி கண்ட பக்தர்களுக்கு கைநீட்டம் பிரசாதம்..

உலகப் பிரசித்தி பெற்ற, சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே நடை திறக்கப்படும்.

ஆனால் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய பண்டிகைகளை முன்னிட்டு கோவில் நடை மற்றும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக, உற்சவங்கள் நடைபெறுவதற்காக 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை கோவில் நடை திறந்திருக்கும்.

கேரளாவில் இருக்கும் உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஷு பண்டிகை அதாவது மலையாள வருட பிறப்பை முன்னிட்டு இன்று விஷூ கணி தரிசனம் பார்க்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விஷு பண்டிகையின் சிறப்பை கனி காணல் என்பதாகும்.

பழங்கள், இனிப்புகள், ரூபாய் நோட்டு, ஆபரணம் மற்றும் கொன்றைபூ ஆகியவை வைத்து, விஷு பண்டிகை அன்று காலையில் அதை பார்ப்பது ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதன் பெயர்தான் கனி காணல் என்பதாகும்.

கேரள மக்கள் விமர்சியாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று விஷு பண்டிகை மற்றும் இதில் முக்கியமான அம்சம் விஷுக்கனி பார்ப்பதாகும்.

ALSO READ:திருப்பரங்குன்றத்தில் திருத் தேரோட்டம் கோலாகலம்!

விஷு பண்டிகை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த கனி காணல் நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் கேரளா புத்தாண்டு அன்று விசேஷமாக மேற்கொள்ளப்படும். கோவிலில் விஷுக் கனி பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு, தரிசனம் பெறுவதற்காகவே இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வார்கள். அந்த வகையில் இன்று ஏப்ரல் 14, 2025 சபரிமலையில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற, சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாதம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே நடை திறக்கப்படும். ஆனால் ஒரு சில மாதங்களில் வரக்கூடிய பண்டிகைகளை முன்னிட்டு கோவில் நடை மற்றும் பக்தர்களுக்கு தரிசனத்திற்காக, உற்சவங்கள் நடைபெறுவதற்காக 10 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை கோவில் நடை திறந்திருக்கும்.

விஷு பண்டிகை 2025 : ஏப்ரல் மாதத்தில், சித்திரை 1 ஆம் தேதி, சூரியன் பெயர்ச்சி அடிப்படையில், கேரளா புத்தாண்டு கொண்டாடப்படும். மலையாள பஞ்சாங்கத்தின் அடிப்படையில் வரும் இந்த புத்தாண்டு விஷு என்று கூறப்படுகிறது.

ALSO READ:சாம்பியன்ஸ் ட்ராபி; கோப்பையை வென்ற இந்திய அணி!

ஒவ்வொரு மாதமும், பஞ்சாங்கத்தின் மாத பிறப்பின் அடிப்படையில் கோவில் சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு, முதல் ஐந்து நாட்களுக்கு பூஜைகள் செய்யப்படும். இதை தவிர கேரளாவின் பிரத்யேகமான பண்டிகைகளான ஓணம், விஷுப் பண்டிகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

அந்த வகையில் பங்குனி ஆராட்டு விழாவிற்காகவும் சித்திரை மாதம் வரும் விஷு பண்டிகைக்காகவும் கோவில் நடை கடந்த சில நாட்களாகவே திறந்து உள்ளது.

விஷுக்கனி பார்ப்பதற்காக இன்று அதிகாலை 4 மணி முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து கணி தரிசனம் காலை 7மணி வரை நீடித்தது.

ஐயப்பனை தரிசிக்க வந்த பக்தர்கள் காலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை கோவிலில் விஷுக்கனி தரிசனத்தையும் செய்தார்கள். இன்று புத்தாண்டு இரவு 10 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். மற்றும் இன்னும் ஐந்து நாட்களுக்கு கோவில் நடை திறந்திருக்கும்.

ஏப்ரல் 18 அன்று வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை சாற்றப்படும். இதற்கு அடுத்ததாக வைகாசி மாதம் புறப்பட்டு மீண்டும் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

ALSO READ:நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் தேதி நீட்டிப்பு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari