Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில் இன்று 29.03.26 ஞாயிறு கிழமை மதியம் ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் திருமஞ்சனம் திவ்ய சேவை விமர்சையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பங்குனி திருக்கல்யாண திருவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

வருகிற ஏப். 1-ஆம் தேதி ஆண்டாள்- ரெங்கமன்னாா் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி திருக்கல்யாண திருவிழாவுக்கு தேங்காய் தொட்டு நியமனம் பெரும் வைபவத்துடன் விழா நிகழ்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

மார்ச் 24 செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் திருக்கல்யாண விழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி இரவு ஆண்டாள், ரெங்கமன்னாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி விழா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனா்.

வருகிற ஏப். 1-ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று காலை செப்பு தேரோட்டமும், இரவு ஆண்டாள் கோயில் முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் ஆண்டாள், ரெங்கமன்னாா் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari