Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை!

ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை!

poolampatti thiruvilakku poojai

துரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 64.பூலாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடந்தன. கோவில் வளாகப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு புதுப்பட்டி ராஜேஸ்வரி அவர்களின் அம்மன் பாடல் கச்சேரியுடன் உலக நன்மை வேண்டியும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பிச்சையம்மாள் கோவில் பங்காளிகள் செய்து இருந்தனர்.

ரவிச்சந்திரன், மதுரை

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari