Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சயனக் கோல சேவை

IMG 20240806 WA0001

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூர பிரம்மோற்சவத்தில் 7 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோல நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில்‌ பிரபலமான திருவிழா ஆடிப்பூரத் தேரோட்ட .திருவிழா ஜூலை 30ல் வேத மந்திரங்கள் முழங்க காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் ஆக. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் - ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வந்தனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளினர்.

ஆக. 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பகதோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், நடைபெற்றது.

இன்று5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது

Sakthi Paramasivan.k

See Full Bio

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari