Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தென்காசியில் பால வேலைக்காக முக்கிய ரயில்வே கேட் மூடல்!

தென்காசியில் பால வேலைக்காக முக்கிய ரயில்வே கேட் மூடல்!

#image_title

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை இலஞ்சி இடையேயான கி.மீ 99/4 இரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் (கடவு எண்.503) 18.12.2024 முதல் தொடங்க உள்ளதால் இரயில்வே கேட் மூடப்படவுள்ளது.

கொல்லம் - திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை-இலஞ்சி போக்குவரத்து மாற்று வழி தடத்தில் மாற்றி விடப்பட உள்ளது மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை இலஞ்சி இடையேயான கி.மீ 99/4 இரயில்வே மேம்பாலம் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் (கடவு எண்.503) 18.122024 முதல் தொடங்க உள்ளதால் இரயில்வே கேட் மூடப்படவுள்ளது. எனவே கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் குத்துக்கல்வலசை-இலஞ்சி - போக்குவரத்தை பின் வருமாறு மாற்றி வழி தடத்தில் மாற்றி விடப்பட உள்ளது.

எனவே, கனரக வாகனங்கள் அனைத்தும் இலத்துார் விலக்கிலிருந்து கணக்குப்பிள்ளை வழியாக செங்கோட்டையும் மற்றும் செங்கோட்டை ஆர்ச்சிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை, இலத்தூர் விலக்கு வழியாக மதுரை சாலையை அடையலாம். இலகுரக வாகனங்கள் அனைத்தும் செங்கோட்டை ஆர்ச்சிலிருந்து 2/8 கி.மீ பிரிந்து செல்லும் வேதம்புதூர் சாலை வழியாகச் செல்ல வேண்டும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari