Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருச்செந்துறை எழுப்பிய கேள்விகள்! புரிந்தால் சரி!

திருச்செந்துறை எழுப்பிய கேள்விகள்! புரிந்தால் சரி!

write thoughts

திருச்சி - திருச்செந்துறை - சில சந்தேகங்கள்

டிசம்பர் 3 1866 இல் திருச்சி - ஈரோடு ( கரூர் வழியாக) ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த ரயில்வே தண்டவாளம் திருச்செந்துறை கோயிலில் (மதிலில்) இருந்து அதிக பட்சம் 150 மீட்டர் மட்டுமே.

இந்தியன் ரயில்வே அல்லது (அப்போதைய) பிரிட்டிஷ் அரசு இந்த தண்டவாளங்கள் போட நிலங்களை கையகப் படுத்தும்போது வக்ஃப் போர்ட் அனுமதி பெற்றதா? தெரியவில்லை.

அரசு தொடக்கக் கல்வி பள்ளி கோவிலிலிருந்து 50 மீட்டர் தொலைவிலும் , உயர் நிலைப் பள்ளி வெறும் 20 மீட்டர் தொலைவிலும் உள்ளன. இவற்றைக் கட்டுகையில் தமிழக அரசு வக்ஃப் போர்ட் அனுமதி பெற்றதா ? தெரியவில்லை. சமீபத்தில் கட்டப்பட்ட வாட்டர் டேங்க் கோவிலில் இருந்து வெறும் 20 மீட்டர். அதற்கு அனுமதி …?

தமிழக அரசும் மத்திய அரசும் இதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் பாலும் நீரும் அன்னப் பறவையால் பிரிக்கப் படுவது போல் உண்மையும் பொய்யும் பிரிக்கப் படலாம்.

ALSO READ:பாலக்காடு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து... பயணிகள் ரயிலுக்கு 'வேட்டு'!

திருச்செந்துறை - மேலும் சில சந்தேகங்கள்

பொதுவாக அவர்கள் காட்டும் கணக்கு 1740-50 களில் முகமது அலிகான் வாலாஜா காலத்தை. இத்தனைக்கும், அந்த நேரத்தில் சந்தா சாகிப்புக்கு அஞ்சி முகமது அலி திருச்சியில் ஒளிந்து கொண்டிருந்தார்.

குழிப் பெருச்சாளி போல் மறைந்து வாழ்ந்த அவர் இவ்வாறு அரசராக கிராமங்களை கொடுத்திருக்க முடியும் என்ற கேள்விக்கு விடை இல்லை.

திருசினாபோலி முற்றுகையின் போது (Siege of Trichinopoly 1741) போரிட்டவர்கள் மராட்டியர்களும், சந்தா சாகிப்பும். இதில் முகமது அலி எங்கிருந்து வந்தார் என்ற கேள்விக்கும் இடமில்லை.

ஆற்காட்டுப் போருக்குப் பிறகு அந்த இடங்கள் அனைத்தும் அந்தந்த கிராம மக்களிடம் / நிலச் சுவாந்தாரர்களிடம் இருந்து வந்தது. வரி வசூலித்து நில ஆவணங்களை உருவாக்கும் பணியில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது.

இதில் தமாஷ் என்னவென்றால் சந்தா சாகிப் (ஆங்கிலேய கிளைவ் இடம் தோற்றவன்! பிரெஞ்சு அடிவருடி!) திருச்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ( முற்றுகையை முன்னிட்டு) ஒரு வரலாறு உண்டு. 'ராஜ பேரிகை ' (சாண்டில்யன்) கதையை சரித்திர ஆவணமாக எடுத்தாலும் முகமது அலி இல்லை. போரில் தோற்றுப் போன சந்தா சாகிப் தான் இருந்திருக்கிறான்.

ALSO READ:தேசிய அபாயத்தின் சிந்தனைத் துளியாக... ஒரு கவிதை!

ஒரு கால் டுமீலா தாப்பர் சரித்திரத்தை மாற்றி எழுதி விட்டாரோ?

1600களில் இருந்து எடுத்துக் கொண்டால்…

தமிழ் நாட்டில் முக்கால்வாசி இடங்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஆட்சியிலும், தஞ்சாவூர் சார்ந்தவை மராட்டியர்களிடமும், நாயக்கர்கள் , தெற்கில் சேதுபதி மன்னரிடமும் இருந்திருக்கின்றன. இதில் எந்த முஸ்லீம் மன்னர் இத்தனை இடங்களை கொடுத்தார் என்று தெரியவில்லை.

1600கள் தொடக்கம் வரை விஜயநகரப் பேரரசு வேறு இருந்திருக்கிறது !

கேவலமான தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ் விருது போல், அவர்களே தங்களுக்கு அடுத்தவன் நிலங்களை பட்டா போட்டுக் கொண்டு, மானம் கெட்டு…

என்ன பிழைப்பு இது!?

சரித்திரப் பூர்வமாக மறுக்க முடியாதவர்கள் வரவேண்டாம். எல்லாவற்றுக்கும் நான் லிங்க் கொடுத்தால் , நீங்கள் என்ன பூனைக்கு புது டிரஸ், யானைக்கு கோவணம் கட்டுவதிலா பிசி ? தேடுங்கள்!

ஈசாப் கதைகள்

இறக்கும் தருவாயில் உயில் எழுதும் தந்தை அத்தனை சொத்துக்களையும் அடிமை பெயரில் எழுதுகிறார். மகனுக்கு ' தந்தைக்கு உரிமையான ஏதாவது ஒன்று மட்டும்' என்று எழுதிவிட்டு இறந்து விடுகிறார்.

ALSO READ:குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன ..?

அடிமை சொத்துகளை எடுக்க வழக்கு வருகிறது. மகன் ' என் தந்தைக்கு சொந்தமான இந்த அடிமையை நான் எடுத்துக் கொள்கிறேன்' என்கிறான்.

இது சிக்கலை புரிய வைப்பதற்காக மட்டும் சொல்லப் படும் கதை. வேறு எதுவும் இல்லை !

எதனால் கோவிலை target செய்து தங்களது உரிமை என்று சொல்கிறார்கள் என்று யோசித்தால் புரியும்.

கோவில்களைச் சுற்றியுள்ள நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை. எனவே கோவில் எங்களுடையது என்று ஆவணப் படுத்திவிட்டால் நிலம் முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்ற வாதம் வைப்பார்கள்.

புரிந்தால் சரி !

தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal AdminSee Full Bio

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari