Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

thirumalaikoil ther kumbidu vazhipadu

ண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு!

தென்காசி மாவட்டம், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் கடந்த 2 ம் தேதி கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சூரசம்ஹார நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து இன்று காலை வண்டாடும் பொட்டலில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில், கந்தசஷ்டி விழா தேரோட்டமும், கும்பிடு கரண சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும், கந்தசஷ்டி விழாவிற்காக விரதம் இருந்த பக்தர்கள் தேருக்கு பின்னால் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தரையில் விழுந்து கும்பிடு கரண சேவை வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் பண்பொழி கரிசல்குடியிருப்பு, செங்கோட்டை, அச்சன்புதூர், கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:IND Vs NZ Test: நியூஸி வெற்றி பெற எளிய இலக்குதான்!

தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் கோமதி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அருணாசலம், மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SMS-சங்கர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dhinasari