Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பொறுப்பு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகை... ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் பரபரப்பு!

பொறுப்பு ஆளுநர் அர்லேகர் சென்னை வருகை... ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் பரபரப்பு!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (மே 5) சென்னை வருகிறார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காததால், ஒரு தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் நிலவுகிறது. இந்த இக்கட்டான நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஆளுநரின் இந்த வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தற்போதைய தேர்தல் நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், தவெக சார்பில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதில் சிக்கல் நீடிக்கிறது. ஆளுநர் சென்னை வந்தடைந்த பிறகு, தனிப்பெரும் கட்சியான தவெக-வை ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதத்தைக் கோருவாரா என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதே சமயம், அண்டை மாநிலமான கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அங்கு காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆளுநர் எடுக்கும் முடிவே மாநிலத்தின் அடுத்தகட்ட அரசியலைத் தீர்மானிக்கும். இதனால் கிண்டி ஆளுநர் மாளிகை மற்றும் அரசியல் கட்சித் தலைமையகங்களில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai