Dailyhunt
எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரானின் பயங்கரவாதமே காரணம்... ட்ரம்ப் ஆவேசம்!

எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரானின் பயங்கரவாதமே காரணம்... ட்ரம்ப் ஆவேசம்!

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதற்கு ஈரானின் "வெறித்தனமான பயங்கரவாதமே" காரணம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஈரானின் செயல்பாடுகள் உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதாக சீறினார். ஈரானின் இந்த போக்கினால் எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் செல்வது நடுத்தர வர்க்க மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக அவர் தனது பேச்சில் காட்டமாக சுட்டிக்காட்டினார்.

ஈரான் தனது அண்டை நாடுகள் மீதும், சர்வதேச கடல் பகுதியில் செல்லும் வணிகக் கப்பல்கள் மீதும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் உலகப் பொருளாதாரம் பெரும் சீர்குலைவை சந்தித்து வருவதாக டிரம்ப் சாடினார். இதுபோன்ற அராஜகச் செயல்கள் சர்வதேச வர்த்தகப் பாதைகளை முடக்கி, விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அவர் கவலை தெரிவித்தார். ஈரானின் இந்த அடாவடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும், இல்லையெனில் பொருளாதார வீழ்ச்சியை தவிர்க்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாட்டால் தவித்து வரும் நாடுகள் இனி கவலைப்படத் தேவையில்லை என்றும், தாராளமாக அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க முன்வருமாறும் அதிபர் டிரம்ப் அதிரடி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் எண்ணெய் வளம் உலக நாடுகளின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருப்பதாகவும், ஈரானை நம்பியிருப்பதை நாடுகள் கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டிரம்பின் இந்த அதிரடி பேச்சு சர்வதேச அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் சந்தையில் இது என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai