Dailyhunt
கேட்ட வரம் தரும் பங்குனி உத்திர விரதம்... எப்படி வழிபடுவது?! விரத முறைகள்!

கேட்ட வரம் தரும் பங்குனி உத்திர விரதம்... எப்படி வழிபடுவது?! விரத முறைகள்!

ன்று ஏப்ரல் 1ம் தேதி தமிழகம் முழுவதுமே சிவாலயங்களிலும் முருகன் சன்னதிகளிலும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு மாதமும் உத்திர நட்சத்திரம் வரும் என்றாலும் பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனியும், கடைசி மாதமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாளே பங்குனி உத்திரம்.

தெய்வங்களின் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் ஆதலால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. இந்த பங்குனி உத்திர நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் கல்யாண விரதம்.


சிவபெருமான் அன்னையை திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தது இதே நாளில் தான். மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற மகாலட்சுமி பங்குனி உத்திர விரதத்தை அனுசரித்துதான் ஸ்ரீமகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்றாள்.வைணவ ஆலயங்களில் மணக்கோலத்தில் தாயாரும் திருமாலும் காட்சி தருவார்கள்

தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்- ஸ்ரீராமன்- சீதை, லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி திருமணங்களும் பங்குனி இந்த நாளில் கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து வீட்டிற்கு அருகில் உள்ள கோவில்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் விரைவில் திருமண யோகம் கைகூடும் என்பது நம்பிக்கை.

திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க பிரம்மன் வேள்வி நடத்த சொக்கநாதரான சிவன் மீனாட்சியம்மையை பங்குனி உத்தரத்தில் மணக்கிறார். பங்குனி உத்திரவிரதம் மேற் கொண்டு அருகே உள்ள கோவில்களுக்கு சென்று வழிபட்டால் சகல பாவங்களும் தொலையும். பங்குனியில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்கும் மாதம். பனியும், வெப்பமும் இணையும் மாதம். இந்த மாதத்தில் வசந்த விழா ஆலயங்களில் அனுஷ்டிக்கப்படும். பங்குனி உத்திர விரதத்தை அனுஷ்டிப்போம். முக்தி பெறும் வரம் பெறுவோம் .

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai