Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோர விபத்து... 200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ... பகீர் சிசிடிவி காட்சி!

கோர விபத்து... 200 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் ... பகீர் சிசிடிவி காட்சி!

மாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு மலைப்பாதையில் அதிவேகமாகச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் பாய்ந்து கோர விபத்துக்குள்ளானது.

இந்தத் துயரமான விபத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. வளைவு நிறைந்த மலைப்பாதையில் கார் சீறிப்பாய்ந்து வந்து சட்டென்று நிலைதடுமாறி பள்ளத்திற்குள் விழுந்த காட்சி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து குறித்து முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், கார் அதிவேகமாகச் சென்றபோது திடீரென அதன் டயர் வெடித்ததே விபத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டயர் வெடித்த வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்த ஓட்டுநரால் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கார் நேரடியாகப் பள்ளத்திற்குள் சரிந்துள்ளது. விபத்து நடந்தவுடனேயே அங்கிருந்த மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட போதிலும் காரின் வேகம் மற்றும் ஆழம் காரணமாகப் பாதிப்பு கடுமையாக இருந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மலைப்பாதைகளில் வாகனங்களைச் செலுத்தும்போது ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் மிதமான வேகத்திலும் செல்ல வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai