Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மிஸ் பண்ணீடாதீங்க... சென்னை முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று இ-கே.ஒய்.சி. சிறப்பு முகாம் !

மிஸ் பண்ணீடாதீங்க... சென்னை முழுவதும் ரேஷன் கடைகளில் இன்று இ-கே.ஒய்.சி. சிறப்பு முகாம் !

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இ-கே.ஒய்.சி. பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக முடிக்க வேண்டும்.

தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் இன்று நடைபெறும் சிறப்பு முகாமுக்கு சென்று தங்களது பதிவை மேற்கொள்ளலாம். பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் அரசின் இந்த சேவையைப் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி எளிlj முறையில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (சென்னை மண்டலம்) இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார். மக்கள் அனைவரும் இந்தத் தகவலைப் பயன்படுத்தி தங்களது கைவிரல் ரேகை பதிவை உடனடியாக நிறைவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு முகாம் மூலமாகப் பொதுமக்களின் நீண்ட நாள் தேவைகள் எளிதில் பூர்த்தி செய்யப்படும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai