Dailyhunt
மோடியில் 'குஜராத்' அதிரடி... சமண அருங்காட்சியகம் திறப்பு !

மோடியில் 'குஜராத்' அதிரடி... சமண அருங்காட்சியகம் திறப்பு !

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் இன்று (ஏப்ரல் 02) பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

காந்திநகரில் சமண மதத்தின் பெருமைகளையும், வரலாற்றையும் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'சாம்ராட் சம்ப்ரதி' அருங்காட்சியகத்தை அவர் திறந்து வைத்தார். இந்தியாவின் பழமையான கலாச்சாரப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு மைல்கல்லாக இந்த அருங்காட்சியகம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருங்காட்சியகத் திறப்பு விழாவைத் தொடர்ந்து, சானந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 'கெய்ன்ஸ் குறைக்கடத்தி' ஆலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வாகனங்கள் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்கான ஆற்றல் தொகுதிகளைத் தயாரிக்கும் இந்த ஆலை, இந்தியாவின் செமிகண்டக்டர் தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும். "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் நவீனத் தொழில்நுட்ப உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஆன்மீகம், கலாச்சாரம் மற்றும் நவீனத் தொழில்நுட்பம் என இருவேறு துருவங்களில் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள இந்தத் தொடக்க விழாக்கள், குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். குறிப்பாகச் செமிகண்டக்டர் ஆலை மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால், அந்தப் பகுதி மக்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai