Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ரூ.15க்கு ரேஷன் கடைகளில் கோதுமை மாவு விற்பனை... தமிழக அரசு புதிய திட்டம்!

ரூ.15க்கு ரேஷன் கடைகளில் கோதுமை மாவு விற்பனை... தமிழக அரசு புதிய திட்டம்!

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் தரமான கோதுமை மாவு பாக்கெட்டுகளை விற்பனை செய்யத் தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது.

இதன் மூலம் பொதுமக்கள் ஒரு கிலோ கோதுமை மாவை வெறும் 15 ரூபாய்க்குப் பெற முடியும்.

வெளியில் உள்ள சந்தைகளில் கோதுமை மாவின் விலை அதிகமாக இருப்பதால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் சிரமப்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் கோதுமையை நவீன முறையில் அரைத்துப் பாக்கெட்டுகளில் அடைத்து நியாய விலைக் கடைகள் வழியாக விநியோகம் செய்யத் துறை சார்ந்த அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அரசின் இந்த அதிரடித் திட்டத்தின் மூலம் பொதுமக்களின் மாதாந்திர மளிகைச் செலவு குறைவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் தடையின்றி கிடைப்பதும் உறுதி செய்யப்படும். இந்தத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வமான முழு விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai