Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டால் என்ன நடக்கும்?: தவெக ஆட்சியமைப்பதில் சவால்!

தனிப் பெரும்பான்மை இல்லாவிட்டால் என்ன நடக்கும்?: தவெக ஆட்சியமைப்பதில் சவால்!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதலிடத்தில் இருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 தொகுதிகள் கிடைக்காததால் ஒரு இழுபறி நிலை நீடிக்கிறது.

தலைவர் விஜய் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும் என்பதும், சபாநாயகர் பதவிக்கு ஒருவரை ஒதுக்க வேண்டும் என்பதும் தவெக-வின் பலத்தை மேலும் குறைக்கும். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தவெக-விற்கு இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயமாகத் தேவைப்படுகிறது.

இந்தச் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை வருகிறார். அவர் தவெக தலைவர் விஜய்யை அழைத்துச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரலாம் அல்லது ஆதரவு கடிதங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிடலாம். திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் உள்ள சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே தவெக-வால் 118 என்ற மேஜிக் எண்ணைத் தொட முடியும். ஒருவேளை தவெக-வால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், ஆளுநர் இரண்டாவது பெரிய கட்சியான திமுகவை ஆட்சியமைக்க அழைப்பார்.

திமுகவாலும் பெரும்பான்மையை மெய்ப்பிக்க முடியாத பட்சத்தில், தமிழகத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதன் பிறகு மாநிலத்தின் 234 தொகுதிகளுக்கும் மீண்டும் ஒரு பொதுத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 59 ஆண்டு கால திராவிட ஆதிக்கத்திற்குப் முற்றுப்புள்ளி வைத்த போதிலும், தனிப்பெரும்பான்மை இல்லாததால் தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதில் பெரும் சவால்கள் நிலவுகின்றன. வரும் நாட்களில் சிறிய கட்சிகளின் நிலைப்பாடே தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai