Dailyhunt
தவெக 108, அதிமுக 74, திமுக 51... பின்னுக்கு தள்ளப்பட்ட ஆளுங்கட்சி!

தவெக 108, அதிமுக 74, திமுக 51... பின்னுக்கு தள்ளப்பட்ட ஆளுங்கட்சி!

மிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தலைமையிலான கூட்டணிக்குத் தனித்தொகுதிகளில் யாரும் எதிர்பாராத மாபெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்ட தனித்தொகுதிகள் ஒன்றில் கூட முன்னிலை பெற முடியாதது அரசியல் வட்டாரங்களில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் மாற்றமானது தலித் மற்றும் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் ஆளுங்கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளதையே மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

திமுக ஆட்சியின்போது அரங்கேறிய வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம் மற்றும் கவின் ஆணவக்கொலை போன்ற சம்பவங்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. இத்தகைய சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறித்த அச்சமே இந்தத் தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாகத் தலித் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று வந்த விசிக போன்ற கட்சிகள் கூடத் தங்களது கோட்டைகளிலேயே தற்போது திணறி வருகின்றன.

தற்போதைய அதிகாரப்பூர்வ நிலவரப்படி திமுக கூட்டணி வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் அதிரடியாக முன்னிலை பெற்று முதலிடத்திலும், அதிமுக 74 தொகுதிகளுடன் இரண்டாம் இடத்திலும் நீடிக்கின்றன. மக்கள் மாற்றத்தை விரும்பி அளித்த இந்தத் தீர்ப்பு, நீண்டகாலமாகச் சில கட்சிகளின் பிடியில் இருந்த தனித்தொகுதிகளின் அரசியல் சித்திரத்தையே அப்படியே தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai