Dailyhunt
தேர்தல் தொடர்பாக சில சந்தேகங்கள் எழுகின்றன... திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்!

தேர்தல் தொடர்பாக சில சந்தேகங்கள் எழுகின்றன... திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.

இளங்கோவன் தேர்தல் நடைமுறைகள் குறித்து சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார். குறிப்பாகத் திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியில் ஸ்டாலின் செய்த மக்கள் நலப்பணிகளுக்காக மக்கள் இன்றும் கண்ணீர் விட்டு அழுவதாகவும், இந்தத் தோல்வி எப்படிச் சாத்தியம் என்பது குறித்துத் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்புச் சீர்திருத்தங்கள் முதற்கொண்டே தங்களுக்குச் சில சந்தேகங்கள் இருந்ததாகக் குறிப்பிட்ட இளங்கோவன், சில குறிப்பிட்ட தொகுதிகளில் வி.வி.பேட் இயந்திரத்தின் சீட்டுகளை முழுமையாகச் சரிபார்க்க விரும்புவதாகக் கூறினார்.

இதற்காகத் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள ஒரு தலைவர், தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இதன் பின்னணியில் ஏதேனும் தொழில்நுட்பத் தவறுகள் நடந்துள்ளதா எனப் பார்க்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களம் தற்போது பெரும் இழுபறியில் உள்ள நிலையில், 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் திணறி வருகிறது. காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு ஆதரவு அளித்துள்ள சூழலில், திமுக மற்றும் அதிமுக இடையே ஆட்சியமைக்க ரகசிய உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல்கள் நிலவுகின்றன.

இத்தகைய குழப்பமான அரசியல் சூழலில், தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மை குறித்து திமுக எழுப்பியுள்ள இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தேர்தல் ஆணையம் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் அமையும் எனத் தெரிகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai