Dailyhunt
விருத்தாசலத்தில் பிரேமலதா பின்னடைவு... தேமுதிக தொண்டர்கள் மத்தியில் மாபெரும் அதிர்ச்சி!

விருத்தாசலத்தில் பிரேமலதா பின்னடைவு... தேமுதிக தொண்டர்கள் மத்தியில் மாபெரும் அதிர்ச்சி!

டலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தற்போது பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அங்கு கடும் போட்டி நிலவி வந்த நிலையில் 3-ம் சுற்று முடிவில் அவர் பின்னிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புக்கு இடையே மிக விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

தொடக்கத்தில் இருந்தே மற்ற முக்கிய வேட்பாளர்களுக்கும் பிரேமலதாவுக்கும் இடையே இழுபறி நிலை நீடித்து வந்ததால் முடிவுகள் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அடுத்தடுத்து எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அவர் மற்ற வேட்பாளர்களை விடக் குறைவான வாக்குகளையே பெற்றுத் தற்போது பின்தங்கியுள்ளார். அசைக்க முடியாத பலத்துடன் களம் இறங்கிய பிரேமலதாவுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

விருத்தாசலம் தொகுதியின் இந்த ஆரம்பக்கட்ட முன்னணி நிலவரங்கள் தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே மாபெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன. விஜயகாந்த் வெற்றி பெற்ற ராசியான தொகுதி என்பதால் இங்குப் பிரேமலதா நிச்சயம் வெற்றி பெறுவார் என அக்கட்சியினர் ஆவலுடன் காத்திருந்தனர். இன்னும் பல சுற்றுகள் மீதமுள்ள நிலையில் வரும் சுற்றுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா என்பதை அறிய ஒட்டுமொத்த மாவட்டமும் மிகுந்த பரபரப்புடன் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinamaalai