Dailyhunt
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. ஒருவர் கைது.!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. ஒருவர் கைது.!

Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபே எனும் உணவகத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். நல்லவேளையாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு..! குற்றவாளி புனே நகரில் பதுங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்

முதலில் இந்த சம்பவத்தை கர்நாடக காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இது வெடிகுண்டு சம்பவம் என்பதால் தேசிய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்தனர். அதன் பிறகு பல்வேறு இடங்களில் சோதனை, விசாரணைகளை தொடர்ந்த NIA, சிசிடிவி காட்சிகள் அடிப்படையிலும் விசாரணையை தொடர்ந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.!

சிசிடிவி காட்சிகள் அடிப்படியில் தொப்பி, முழுக்கை சட்டை, அடர் நிற பேண்ட் அணிந்த ஒரு நபரின் புகைப்படத்தை வெளியிட்டு இவரை பற்றி தகவல் தெரிந்தால் NIAக்கு தகவல் தெரிவிக்கும்படியும், தகவல் தெரிவிப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை எனவும் அறிவித்து இருந்தது.

- வாட்ஸ் அப் யுனிவர்சிட்டி மூலம் பொய் பிரச்சாரம்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதனை தொடர்ந்து, தற்போது பல்லாரி மாவட்டத்தில் சபீர் என்பவரை NIA போலீசார் கைது செய்து உள்ளனர். சிசிடிவி காட்சிகளில் உள்ளவர் அவர் தானா.? இல்லை இந்த குணுவெடிப்பில் வேறு ஏதும் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை NIA அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Dinasuvadu