சூர்யா தனது முதல் படத்தில் 50,000 சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. ஒரு காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இவரது நடிப்பில் கடைசியாக அமேசான் பிரேமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 40 ஆவது படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து வாடிவாசல், அருவா, நவராசா போன்ற படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது, சூர்யா தனது முதல் படமான நேருக்கு நேர் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் பரவி வருகிறது.

