Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
20 வருடமாக மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் வஜ்ரத்தின் இரகசியம்!

20 வருடமாக மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருக்கும் வஜ்ரத்தின் இரகசியம்!

லங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பொதுக்கூட்டங்களின் போதும் முக்கியமான அரசியல் நிகழ்வுகளின் போது வஜ்ரத்தை தன்னுடைய கையில் வைத்திருக்கின்றார் என்பது செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2005ஆம் ஆண்டு ஆன்மீக சிகிச்சையாளர் ஒருவர் இந்த வஜ்ரத்தை மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கியதாவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வஜ்ரம் ஆன்மீக பாதுகாப்பு, ஜோதிட நம்பிக்கை, அதிகாரத்தின் அடையாளம் மற்றும் மன உறுதிக்கான ஒரு தூண்டுதல் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அண்மையில் நடந்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர பொதுக்கூட்டத்தின்போது மகிந்த ராஜபக்சவின் கையில் இந்த வஜ்ரம் இருக்கக்கூடிய புகைப்படங்கள் அதிகளவில சமூக வலைத்தளங்களில பகிரப்பட்டு வந்தது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil