பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நாவலப்பிட்டி - கெடபுலாவில் இன்று (05.05.2026) காலை 7 மணியளவில் விபத்து இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 13 பேர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
இதன்படி 7 முதல் 10 வயதிற்கிடைப்பட்ட சிறுவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வானின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் விபத்து தொடர்பில் நாவலப்பிட்டி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

