Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஈரானிய கால்பந்து அதிகாரிகளை நாடுகடத்தியது கனடா

ஈரானிய கால்பந்து அதிகாரிகளை நாடுகடத்தியது கனடா

ரானிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, டொராண்டோ விமான நிலையத்தில் கனடிய குடிவரவு அதிகாரிகளால் விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக FIFA மாநாட்டிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைக்கு முன்னதாக வான்கூவரில் நடைபெறவிருந்த இந்த முக்கிய கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த ஈரானிய அதிகாரிகள், செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தபோதிலும் விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்பு

ஈரானிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜுக்கு, ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் (IRGC) தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதே இந்த முடிவுக்குக் காரணம்.

கனடா, 2024-ல் IRGC-ஐ ஒரு 'பயங்கரவாத அமைப்பு' என அறிவித்தது, மேலும் அதன் உறுப்பினர்கள் கனடாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், IRGC அதிகாரிகளுக்கு கனடாவில் இடமில்லை என்பதே தங்களின் கொள்கை என கனடிய அரசாங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

"தற்செயலாக" நடந்த சம்பவம்

இருப்பினும், இந்தச் சம்பவம் "தற்செயலாக" நடந்தது என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார்.

பெப்ரவரியில் ஈரானுடனான அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தச் சம்பவம் வரவிருக்கும் உலகக் கோப்பையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பிஃபா தலைவர் வருத்தம்

ஈரானிய வீரர்கள், அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் சுதந்திரமாகப் பயணம் செய்யும் திறன் குறித்து இது கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்தச் சம்பவம் குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் எதிர்காலத்தில் ஈரானியப் பிரதிநிதிகளுடன் சிறப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்த முடிவு செய்துள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கோப்பையை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil