இவ்வாண்டிற்கான வானியல் அதிசயம் ஒன்று இன்று நிகழவுள்ளதாக விண்வெளி விஞ்ஞானியும் பொறியியல் விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்று இன்று இரவு (05) முதல் நாளை(06) அதிகாலை வரை தெரியும் என்று கிஹான் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
இந்த விண்கல் மழைக்கு "ஈட்டா அக்வாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

