மார்ச் 2 முதல் லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 3,371 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் 10,129 பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மாத்திரம் தெற்கு லெபனானில் நடந்த இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரலியத் தாக்குதல்
இந்நிலையில் இஸ்ரேலியத் தாக்குதலின் போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் மக்களுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன என கூறப்படுகிறது.

ஏனெனில் சண்டையின் காரணமாக மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் அதாவது சுமார் 12 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

