Dailyhunt
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்தாடல் அரங்கு ஆரம்பம்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கருத்தாடல் அரங்கு ஆரம்பம்

னநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் கருத்தாடல் அரங்கு கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

அந்தக் கட்சியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இன்று (04) காலை 10 மணியளவில் குறித்த கருத்தாடல் அரங்கு ஆரம்பமானது.

நிகழ்வின் ஆரம்பத்தில் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான கருணாகரன் தலைமையில் உயிர் நீத்த வீரர்கள் மற்றும் உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர்களால் மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது

இதனைத் தொடர்ந்து, மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் எண்ணக்கருவில் ஓய்வு நிலை மூத்த நிர்வாக அதிகாரி இரேனியஸ் செல்வின், சமூக ஆய்வாளர் சுப்பிரமணியம் சிவகுமார், பெரியசாமி முத்துலிங்கம், கொள்கை பகுப்பாய்வாளர் B.திசாநாயக்க, கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் மூத்த ஊடகவியலாளர் வீரசக்தி தனபாலசிங்கன் ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்கள் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil