Dailyhunt
கடும் வறட்சி : நீர் விநியோகம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கடும் வறட்சி : நீர் விநியோகம் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

நாட்டில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நீர் விநியோகத்தை சில பகுதிகளில் மட்டுப்படுத்தவும், ஏனைய சில பகுதிகளில் ஒரு சில மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு பிரதானமாக நீர் விநியோகிக்கும் கலதுவாவ மற்றும் லபுகம நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமாகக் குறைவடைந்துள்ளதாக அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை

தற்போதைய நிலைமை குறித்து பொதுமக்களைத் தெளிவுபடுத்துவதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இன்று காலை விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தது.

இதன்போது, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கும் வாகனங்களைக் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil