Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கொழும்பில் துப்பாக்கிசூடு : படுகாயமடைந்த தொழிலதிபர் உயிரிழப்பு

கொழும்பில் துப்பாக்கிசூடு : படுகாயமடைந்த தொழிலதிபர் உயிரிழப்பு

புதிய இணைப்பு

பெல்லன்வில பகுதியில் இன்று (25) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்த அவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு

கொழும்பு பொரலஸ்கமுவவின் பெல்லன்வில பகுதியில் இன்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தொழிலதிபர் ஒருவர் காயமடைந்து, களுபோவில போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுமுறை விடுதியின் உரிமையாளரான 55 வயதுடைய நபர் ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்.

காவல்துறை வெளியிட்ட தகவல்

துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ​​காயமடைந்த நபர் தனது விடுதிக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்கள் அல்லது சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil