Dailyhunt
தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

தொடரும் நீர் வெட்டு - தவிக்கும் கொழும்பு வாழ் மக்கள்

நிலவும் சீரற்ற காரணமாக கொழும்பில் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நீர் விநியோகத் தடை இன்றும் (04.04.2026) தொடர்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நுகர்வோரின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை 24 மணித்தியாலங்களில் இருந்து 18 மணித்தியாலங்களாகக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நேற்று (03.04.2026) மாலை அறிவித்திருந்தது.

நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளது

அதன்படி, கால அட்டவணைக்கு அமைவாக எதிர்வரும் 10ஆம் திகதி வரை அந்தப் பகுதிகளில் அவ்வப்போது நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளது.

பாதுக்கை, ஹோமாகம, பெலவத்தை மற்றும் பன்னிப்பிட்டிய உள்ளிட்ட சில பகுதிகளில் இந்தத் திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இதற்கமைய முதற்கட்டத்தின் கீழ், பாதுக்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.00 மணி முதல் நேற்று பிற்பகல் 2.00 மணி வரைநீர் விநியோகத் தடை திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல், ஹோமாகம பகுதியில் நேற்று (03) இரவு 8.00 மணி முதல் இன்று (04) பிற்பகல் 2.00 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை

மேலும், பெலவத்தை பகுதியில் இன்று (04) இரவு 8.00 மணி முதல் நாளை அதாவது ஏப்ரல் 5ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி வரை நீர்வெட்டு நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை இந்த பகுதிகளில் நீர் விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பத்தரமுல்ல, பாமன்கடை, வெள்ளவத்தை மற்றும் நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை 3 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

எவ்வாறாயினும், நீர்வெட்டு அமுல்படுத்தப்படாத நாட்களில் தடையின்றி நீர் விநியோகத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil