Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வான் மீது மோதியது யானை : ஐவர் படுகாயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்

வான் மீது மோதியது யானை : ஐவர் படுகாயம் : மூவரின் நிலை கவலைக்கிடம்

பாதுக்கவிலிருந்து அனுராதபுரம் நோக்கி நேற்றையதினம்(24) சென்றுகொண்டிருந்த வான் மீது யானை மோதியதில் ஐவர் காயமடைந்தனர்.

இந்தத் துயரச் சம்பவம் வானில் பயணித்தவர்கள் சென்றடையும் இடத்தை அடைவதற்குச் சில மீட்டர்களுக்கு முன்பு,யானை மீது வான் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மனிதன்-யானை மோதல்

காவல்துறையின்படி, அந்த வானில் சுமார் ஆறு பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள படேனியா கிராமம், கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் மனித-யானை மோதலின் விளைவாக சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: IBC Tamil