பொதுவாக வாழ்க்கையில் நடைமுறை என ஒன்று உள்ளது. அதாவது ஒன்றைக்கொடுத்து ஒன்றை வாங்குவது. (Give And Take Policy).
அன்பைக்கொடுத்தால் அன்போடு கூடிய பண்பு வரும். அதேபோல வம்பைக்கொடுத்தால் வம்போடு கூடிய விரோதமும் கூடவே இலவச இணைப்பாய் வருமே! உதாரணமாக நாம் வளர்க்கும் நாயோ, அல்லது பக்கத்து வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கோ பிஸ்கட் அல்லது உணவு பதாா்த்தம் ஏதாவது கொடுத்தால் அப்போது அது நம்மிடம் வாலை ஆட்டும். மாறாக அதனிடம் பணத்தாள் ஒன்றைக்கொடுத்துப்பாருங்கள், அதை அது முகர்ந்துபாா்த்துவிட்டு தூக்கிப்போட்டுவிடும். வாலையும் ஆட்டாது.
அதேபோல அமாவாசை தினம் மட்டுமல்லாது, தினசாி காலை, மதியம் இருவேளைகளிலும் காகங்களுக்கு உணவு வைத்துப்பாருங்கள், தினசரி அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு மிகச்சரியாக கூட்டமாய் வந்து விடுகிறதே! அந்த விஷயத்தை நாம் எப்படி எடுத்துக்கொள்வது?
அதேபோல கோவிலுக்கு செல்லும் நிலையில் யானையைப் பாா்க்கிறோம் யானையை விநாயகராக கும்பிட்டு தொட்டுக்கும்பிடுவதும் உண்டு. அப்போது நமது கையில் இருக்கும் தேங்காய் மூடி, பழம் இவைகளைக்கொடுப்போம், அழகாய் தும்பிக்கையால் வாங்கி அநாயசமாக சாப்பிடும்.
அதையடுத்து அந்த யானையிடம் சில்லறை நாணயம், பணநோட்டு எதையாவது கொடுத்துப்பாருங்கள். அதை வாங்கி பாகன் கையில் கொடுத்துவிட்டு நமக்கு ஆசீா்வாதம் வழங்குமே!
துன்பத்தைக் கடக்க மனப்பாங்கை மாற்றுவது எப்படி?இது யானைப்பாகன் சொல்லிக்கொடுத்த பழக்கமே என நினைத்தாலும், அதற்கு சொல்லிக்கொடுத்த நல்ல விஷயத்தை அது சரிவர செய்கிறதே! ஐந்து அறிவு உள்ள ஐீவன் தனக்கு சொல்லிக்கொடுத்ததை மறக்கவில்லை.
ஆனால் நமது பொியவர்கள் மூத்தவர்கள் ,சொல்லிக்கொடுத்த நல்ல பழக்கவழக்கங்களை நாம் ஏன் கடைபிடிப்பதில்லை? காரணம், எல்லாம் எனக்குத்தொியும் நான் பாா்த்துக்கொள்வேன் என்ற அகம்பாவ மனோநிலையே, காரணமாகிவிடுவதில் வியப்பே இல்லையே!
அதுபோலவே பறவைகளும், மிருகங்களும், தனது தேவைக்கு அதிகமாய் ஆசைப்பட்டதில்லையே! அந்த பக்குவம் நமக்கு வரவேண்டும். அதுதான் உயர்வான வாழ்வுக்கான ஏனிப்படி.
அதேபோல மரம் வெட்டுபவன் கையில் உள்ள கோடாலியைப் பாா்த்து வெட்டுப்படப்போகும் மரங்கள் கவலைப்படுவதில்லை.
பயப்படுவதும் இல்லை. காரணம் நேற்று வெட்டப்பட்ட மரத்தின் ஒரு பாகத்தில்தான் கோடாாி இணைக்கப் பட்டுள்ளது.
வெட்டுபட்ட மரம் தன் அருகிலிருந்த மரத்தை வெட்ட கோடாலிக்காம்பாய் துணைபுாிகிறது. அதுபோலவே நம்மில் பலர் நம்மோடு இருந்து பழகி நல்லது கெட்டவைகளை அனுபவித்து, நாம் சோா்ந்தோ, அல்லது நொடித்தோ போய்விட்டால் நம்மை புறந்தள்ளி விடுகிறாா்களே! இதைத்தான் பொியவர்கள் பாா்த்துப்பழகு, பாா்த்துப் பழகு, நிதானம் கடைபிடி, அகலக்கால் வைக்காதே, அடுத்தவர் பொருள் கண்டு ஆசை வைக்காதே, இப்படி பல்வேறு நல்ல விஷயங்களையெல்லாம் நமக்கு சொல்லிக் கொடுக்கும்போது, அது கசப்பாகத்தானே தொிந்தது.
என்னாது?! பிரச்னைகள் நம் வாழ்க்கையை சுவையானதாக மாற்றுகிறதா?அதை நாம் கடைபிடிக்காமல் போவதால் அல்லல்படுவது யாா்? நாம்தானே, ஐந்தறிவு கொண்ட மிருகங்களுக்கு இருக்கும் பண்பாடுகள் கூட நம்மிடம் இல்லாதது கண்டு வேதனைப்படவேண்டிஉள்ளதே. எனவே, எந்த தருணத்திலும் அன்பு செலுத்தி, மனசாட்சிக்குப் பயந்து, நோ்மறை சிந்தனையோடு வாழ்ந்தாலே எல்லாம் நல்லதாகவே அமையும். என்பதை புாிந்துகொண்டு வாழ்வதே சிறப்பாகும்!

