சுற்றலா என்றாலே பெரும்பாலானோர் முதலில் நினைப்பது எங்கு செல்லலாம் என்பது தான். காலநிலைக்கு ஏற்றவாறு இடங்களைத் தேர்வு செய்தால், பயணச் செலவைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கையின் அழகையும் முழுமையாக ரசிக்க முடியும்.
இந்தியா போன்ற பரந்த நிலப்பரப்பைக் கொண்ட நாட்டில், ஒவ்வொரு பருவமும் தனித்தனி அழகை வெளிப்படுத்தும். ஒரே இடம் வெவ்வேறு காலநிலைகளில் விதவிதமான அனுபவங்களை கொடுக்கும். அதனால் தான், சுற்றலா ஆர்வலர்களும் மற்றும் பயண நிபுணர்களும், காலநிலைக்கு ஏற்றவாறு தங்களின் பயணங்களைத் திட்டமிட வேண்டும்.
வெயில் மற்றும் மழைக்காலத்திற்கான சிறந்த சுற்றுலா வழிகாட்டி
வெயில் காலம் (summer): ஏப்ரல் முதல் ஜூன் வரை நீடிக்கும் வெயில் காலத்தில், சமவெளிப் பகுதிகளில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். ஆகையால் ஊட்டி, கொடைக்கானல், மணாலி, சிம்லா, டார்ஜிலிங் போன்ற மலைப் பகுதிகள் நிறைந்த சுற்றலா தலங்களை பயணிகள் தேர்வு செய்யலாம். இதமான காலநிலை மற்றும் இயற்கை எழில் இவையெல்லாம் மேற்கண்ட இடங்களின் சிறப்பாக விளங்குகிறது.
சுற்றுலா வழிகாட்டிமழைக்காலம் (Monsoon): ஜூலை முதல் செப்டம்பர் வரை பொழியும் மழையால் இயற்கை புத்துயிர் பெறுகிறது. இந்தக் காலத்தில் மூணாறு, கூர்க், வால்ப்பாறை, ஆலப்புழா மற்றும் கோவா போன்ற இடங்கள் பசுமை போர்த்திய காட்சியாலும், அருவிகளின் அழகாலும் சுற்றுலா பயணிகளை கவர்கின்றன. இவை மன அமைதியும், புத்துணர்ச்சியையும், வழங்கும் இடங்களாக இருக்கின்றன.
இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பயணிக்க உதவும் எஸ்சிஓ சுற்றுலா வழிகாட்டி
இலையுதிர் காலம் (Autumn): அக்டோபர் மற்றும் நவம்பர் வரையிலான இந்த பருவத்தில் வானிலை மிகவும் இதமாக இருக்கும். காஷ்மீர், லடாக், ஜெய்ப்பூர், உதய்ப்பூர், மற்றும் ஹம்பி போன்ற இடங்கள் வண்ணகளின் மாற்றங்களாலும், இனிமையான காலநிலையாலும், தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன.
நந்தி ஹில்ஸ் போரடிச்சிருச்சா? பெங்களூரு பக்கத்துல ஒளிஞ்சிருக்கும் இந்த ரகசிய சொர்க்கம் தெரியுமா!குளிர்காலம் (Winter): டிசம்பர் முதல் பிப்ரவரி வரை நிலவும் குளிர்காலத்தில், பனிப்பொழிவை ரசிக்க விரும்புவோருக்கு காஷ்மீர், மணாலி, அவுலி, தாவாங் மற்றும் ஷில்லாங் போன்ற இடங்கள் சிறந்த தேர்வாக அமைகிறது. வெண்பனியால் போர்த்தப்பட்ட மலைகள் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கின்றன.
வசந்த காலம் (Spring): பிப்ரவரி மற்றும் மார்ச் வரை நீடிக்கும் வசந்த காலம், மலர்களின் பருவம் என்றும் அழைக்கப்படுகின்றது. சிக்கிம், டார்ஜிலிங் மற்றும் மைசூர் போன்ற இடங்களில் வண்ணமயமான மலர்களும், இதமான காலநிலையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.
தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கும் ஸ்மார்ட் சுற்றுலா வழிகாட்டி
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்களில் வைரலாகும் இடங்களைப் பார்த்தவுடனே பயணத்தைத் திட்டமிடுவது பலரின் வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு இடத்தின் உண்மையான அழகை ரசிக்க வேண்டுமெனில், அதற்கேற்ற பருவத்தில் அங்கு செல்வதே சிறந்த தேர்வாகும்.
பசுமை, அருவி, வியூ பாயிண்ட்: ஆச்சரிய அனுபவங்கள் தரும் நெல்லியம்பதி மலைகள்!சரியான காலநிலையில் மேற்கொள்ளப்படும் பயணம், இயற்கையின் பல்வேறு முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது. மேலும், அதிக கூட்ட நெரிசல், எதிர்பாராத வானிலை மாற்றங்கள், தேவையற்ற செலவுகள் போன்றவற்றையும் தவிர்க்க உதவுகிறது.
எனவே, அடுத்த முறை சுற்றுலா திட்டமிடும்போது, இடங்களை மட்டும் தேடாமல், பருவங்களையும் கவனத்தில் கொள்ளுங்கள். சரியான பருவத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு பயணம், வெறும் சுற்றுலாவாக இல்லாமல், வாழ்நாள் முழுவதும் மனதில் நிற்கும் இனிய நினைவுகளின் தொகுப்பாக மாறிவிடும்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம், சமூக வலைதளங்களின் போலி விளம்பரங்களில் ஏமாறாமல், எந்தக் காலநிலையில் எங்கு சென்றால் அதிகப் பணத்தைச் சேமிக்கலாம் என்ற தெளிவை நீங்கள் பெறுவீர்கள். இயற்கை அதன் முழு அழகோடு இருக்கும் தருணத்தில் நீங்கள் அங்கு இருப்பதால், உங்கள் பயணப் புகைப்படங்கள் மிக அழகாக அமைவதோடு, மனதிற்கு முழுமையான புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

