Dailyhunt
பூடானின் பரோ விமான நிலையத்தில் விமானிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

பூடானின் பரோ விமான நிலையத்தில் விமானிகள் எதிர்கொள்ளும் சவால்கள்!

Kalki Online 1 year ago

குழந்தைகளிடம் உங்கள் லட்சியம் என்ன என்று கேட்டால், அதில் பாதி பேர் விமானிகள் என்று கூறுவார்கள். விமானத்தில் பறப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருக்கும் குதூகலமான ஒன்று.

ஆனால் உலகிலேயே விமானிகள் கஷ்டப்பட்டு தரை இறங்கும் விமான நிலையம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

நம் அண்டை நாடான பூடான் இமய மலைகளின் ராஜ்ஜியமாக உள்ளது. இங்குள்ள விமான நிலையம்தான் பரோ. இந்த விமான நிலையம் அதன் சவாலான நிலப்பரப்பு மற்றும் கணிக்க முடியாத வானிலை காரணமாக உலகின் மிகவும் ஆபத்தான விமான நிலையங்களில் முதன்மையானதாகஉள்ளது.

உயரமான இமயமலை சிகரங்களால் சூழப்பட்ட ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் 7,364 அடி உயரத்தில் அமைந்துள்ளது, இதனால் விமானிகள் கூர்மையான திருப்பங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளில் மிகவும் துல்லியத்துடன் தரையிறங்க வேண்டும்.

இந்த சிரமங்கள் காரணமாக, விமானப் போக்குவரத்து ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப் பட்ட உயர் பயிற்சி பெற்ற விமானிகள் குழு மட்டுமே பரோவில் தரையிறங்கவும் புறப்படவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது! இந்த விமான நிலையம் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.

வெளிநாட்டுக்கு சுற்றுலா போறீங்களா? அப்ப, இதெல்லாம் அடிப்படைங்க!

18,000 அடி உயர இமயமலை சிகரங்களால் சூழப்பட்ட பரோ விமான நிலையத்தில் தரையிறங்கும் கருவிஅமைப்பு இல்லாமல் விமானிகள் கைமுறையாக வழிசெலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தரையிறங்கும் அமைப்புகள், குறைந்த தெரிவு நிலையில் இருக்கும்போது கூட விமானிகளை பாதுகாப்பாக தரையிறக்க அனுமதிக்கின்றன. இந்த வகை அமைப்பில் தரையில் உள்ள டிரான்ஸ்மிட்டர்கள் விமானத்தில் உள்ள ரிசீவர்களுக்கு தகவல்களை அனுப்புகின்றன. இந்த வழியில், அவை கிடைமட்ட மற்றும் செங்குத்து வழிகாட்டுதலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், ஃபரோ விமான நிலையத்தில், விமானிகள் நம்பியிருக்கக்கூடிய ஒரே சாதனம் அவர்களின் கண்கள் மட்டுமே. சவாலான தரையிறக்கத்தின்போது, விமானிகள் மலைகளுக்கு இடையில் ஜிக்ஜாக் செய்து, தரையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அடையாளங்களை நம்பி தங்கள் வழியை உருவாக்கவேண்டும்,

இந்த காரணங்கள் அனைத்தும் விமானிகள் தரையில் உள்ள அந்த அடையாளங்களின்படி மிகவும் துல்லியமான வேகத்திலும் உயரத்திலும் பறக்கவேண்டும். உண்மையில், விமானம் தரையிறங்குவதற்கான அணுகுமுறை செயல்பாட்டில் கடைசி திருப்பம் விமானத்தின் சக்கரங்கள் ஓடுபாதையைத் தொடுவதற்கு சுமார் 30 வினாடிகளுக்கு முன்புதான் செய்யப்படுகிறது.

ஆகையால்தான் ஃபாரோவில் தரையிறங்க அனுமதிக்கப்படும் விமானிகள் மிகவும் கடுமையான பயிற்சியை மேற்கொள்கிறார்கள், இதில் பயணிகள் இல்லாத விமானத்தில் சிமுலேட்டர்களில் பணிபுரிவது மற்றும் அந்த இடத்திலேயே புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகியவற்றை வெற்றிகரமாகச் செய்வது ஆகியவை அடங்கும்.

சொர்க்க பூமியாகத் திகழும் வெள்ளகவி (Vellagavi) கிராமம்!

மேலும் விமான ஓடுபாதையில் ஒருவர் கொஞ்சம் சத்தமாக தும்மினால் கூட பிரச்னை என்பதால் நிறைய அனுபவம் உள்ள உரிமம் பெற்ற மொத்தமாகவே 25 விமானிகளுக்கு மட்டுமே இங்கு தரையிறங்க சான்றிதழ் பெற்றுள்ளனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online