உணவில் உப்பு இல்லையென்றால் அதன் உண்மையான சுவையை நம்மால் உணர முடியாது. ஆனால், இன்று நாம் அனைவரும் தேவைக்கு அதிகமாக உப்பை உணவில் சேர்த்து வருகிறோம்.
உண்மையில், சோடியம் நம் உடலுக்கு தேவையான ஒரு முக்கியமான தாது உப்பு தான். எனினும், இதனை அதிகமாக உட்கொள்ளும்போது, அது இதய நோய்கள், பக்கவாதம் போன்ற தீவிர நோய்கள் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண உப்பில் (சோடியம் குளோரைடு) சோடியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, அதிகரித்துவரும் இந்த அதிக உப்பு நுகர்வு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு குறைவாக, அதாவது சுமார் 2,000 மில்லிகிராம் சோடியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், நம்மில் பெரும்பாலானோர் இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக உப்பை சாப்பிடுகிறோம் என்பது கவலைக்குரிய விஷயம். அதிக உப்பு உட்கொள்வது உடலில் சோடியம் அளவை அதிகரித்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?இதற்கு தீர்வாக, உலக சுகாதார நிறுவனம் குறைந்த சோடியம் உப்பை அல்லது பொட்டாசியம் உப்பை பயன்படுத்த பரிந்துரை செய்கிறது. பொட்டாசியம் உப்பை எடுத்துக்கொள்வது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும். மேலும், ஒரு நாளைக்கு சுமார் மூன்றரை கிராம் பொட்டாசியம் சத்து எடுத்துக்கொள்வது இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.
பொட்டாசியம் உப்பு என்பது நாம் வழக்கமாக பயன்படுத்தும் சோடியம் குளோரைடு உப்புக்கு பதிலாக பொட்டாசியம் குளோரைடு கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த பொட்டாசியம் உப்பை பயன்படுத்துவதன் மூலம், நாம் சோடியம் உட்கொள்வதைக் குறைத்து, பொட்டாசியம் உட்கொள்வதை அதிகரிக்க முடியும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பேரீச்சம் பழம் இரத்த சேகையைப் போக்க மட்டும்தானா?உயர் இரத்த அழுத்தம் தொடர்பான ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வழிகாட்டுதல்கள் கூட, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதனால் ஏற்படும் இதய ஆபத்துகளை கட்டுப்படுத்த பொட்டாசியம் நிறைந்த உப்பை பயன்படுத்த பரிந்துரைக்கின்றன. எனினும், சிறுநீரக நோயாளிகள் பொட்டாசியம் குளோரைடு உட்கொள்வது சில பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, சிறுநீரக நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பொட்டாசியம் உப்புகளுக்கு மாறுவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், உப்பின் அளவை குறைப்பதற்கு DASH உணவுமுறை எனப்படும் உணவு கட்டுப்பாடு முறையும் சிறந்த தீர்வாக அமையும். DASH உணவுமுறை என்பது உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஒரு சிறந்த உணவு முறை. இந்த உணவு முறையில் சோடியம் குறைவாகவும், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாகவும் இருக்கும். DASH உணவு முறையில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகமாகவும், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் வெண்ணெய், நெய் போன்ற நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாகவும் இருக்கும்.
மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் அளவு தீங்கானதா காற்று மாசுபாடு?எனவே, உப்பின் தீங்கை உணர்ந்து, சரியான அளவு உப்பை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். பொட்டாசியம் உப்பு மற்றும் DASH உணவுமுறை போன்ற ஆரோக்கியமான மாற்றுகளை பின்பற்றுவதன் மூலம், நாம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் போன்ற ஆபத்தான நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் உடல் நலன் குறித்து சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது எப்போதும் சிறந்தது.

