Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இரும்பாலான ஏர் மனிதகுலத்தை எப்படி மாற்றியது?

இரும்பாலான ஏர் மனிதகுலத்தை எப்படி மாற்றியது?

Kalki Online 10 months ago

முழுமையாக இரும்பால் செய்யப்பட்ட ஏரை வடிவமைத்து, அமெரிக்காவில் விவசாயிகள் பயன்படுத்தும் விதமாக சட்டரீதியாக அறிமுகப்படுத்தியவர் Charles Newbold.

இவர் அமெரிக்க கண்டுபிடிப்பாளர். நியூ ஜெர்சியில் வசித்தார். 1797-ஆம் ஆண்டு 'cast-iron plough'க்கு பேட்டென்ட் (Patent) பெற்றார்.

கிமு காலத்திலேயே இந்தியா, சீனா போன்ற இடங்களில் இரும்பு முனை பொருத்திய மர ஏர் இருந்தது. ஆனால் Charles Newbold தான் 'முழுக்க இரும்பால் செய்யப்பட்ட ஏர்'க்கு அதிகாரப்பூர்வ காப்புரிமை பெற்றவர். பின்னர் Jethro Wood (1819) அதனை மேம்படுத்தி, பிரித்து எளிதில் பழுது பார்க்கும் வகையில் மாற்றினார்.

இரும்பாலான ஏரின் பயன்பாடு மிக முக்கியமானது.

1. நிலத்தை உழுதல்: இரும்பு முனை கொண்டதால், கடினமான மண், களிமண், காடுகளை எளிதில் உழ முடிந்தது. மர ஏருக்கு முடியாத வேலைகளை இரும்பு ஏர் செய்தது.

2. புல் & களைகளை அகற்றுதல்: நிலத்தில் இருக்கும் புல், வேர்கள், களைகளை வெட்டி எளிதில் அகற்றும். இதனால் நிலம் சுத்தமாகி, விதை விதைக்க உகந்த நிலை உருவாகும்.

3. நிலத்தை காற்றோட்டம் செய்வது: உழுத நிலத்தில் காற்று சுழற்சி அதிகரிக்கும். தாவர வேர்களுக்கு ஆக்சிஜன் போதுமான அளவில் கிடைக்கும்.

4. நீர் ஊடுருவல் அதிகரித்தல்: உழுத நிலம் தண்ணீரை சுலபமாக உறிஞ்சும். மழைநீர் சேமிப்பு மற்றும் பாசனத்திற்கு இது மிகவும் உதவும்.

5. விளைச்சல் அதிகரித்தல்: பெரிய நிலப்பரப்பை குறைந்த நேரத்தில் உழ முடிந்ததால், சாகுபடி பரப்பு அதிகரித்தது. விளைச்சலும் மக்களின் உணவு உற்பத்தியும் வேகமாக உயர்ந்தது.

இரும்பு ஏரின் வரலாற்று தாக்கம்

1. நிலத்தை விரிவாக சாகுபடிக்கு மாற்றியது: மர ஏர் முனையால் சாகுபடி செய்ய முடியாத கடின மண், காடுகள், ஈர நிலங்கள் இரும்பு ஏர் மூலம் எளிதில் உழப்படத் தொடங்கின. குறிப்பாக கங்கை சமவெளி, சீனாவின் மஞ்சள் ஆறு பள்ளத்தாக்கு, ஐரோப்பிய காடுகள் ஆகியவை பரந்த விளை நிலங்களாக மாறின.

2. உணவு உற்பத்தி அதிகரித்தது: நிலம் உழுவதில் வேகம் அதிகரித்ததால், விதைப்பும் பெருகியது. விளைச்சல் அதிகரிப்பதால் அரிசி, கோதுமை, போன்ற முக்கிய தானியங்கள் பெருமளவில் உற்பத்தியானது.

3. மக்கள் தொகை வெடிப்பு: அதிக உணவு = அதிக மக்கள். பசி குறைந்ததால் குழந்தை மரணம் குறைந்தது; மக்கள் தொகை வேகமாக உயர்ந்தது. இது சமூக வளர்ச்சிக்கான அடிப்படை ஆனது.

4. கிராமங்கள் நகரங்களாக மாறியது: கூடுதலான உணவு இருப்பதால் அனைவரும் விவசாயத்தில் மட்டுமே ஈடுபட வேண்டியதில்லை. கைத்தொழில், வாணிபம், கட்டிடம் போன்ற தொழில்கள் தோன்றின. இதன் விளைவாக கிராமங்கள் மெதுவாக நகரங்களாக (Urban centers) மாறின.

5. பேரரசுகளின் எழுச்சி: பரந்த நிலங்களை உழுவதால் அரசுகளுக்கு வரி வசூல் அதிகரித்தது. அரசுகளுக்கு படை வைத்திருக்கும் திறன் ஏற்பட்டது. இதனால் மகா சாம்ராஜ்யங்கள் (எ.கா. மகதா, மௌரியர், பின்னர் ரோமன் பேரரசு) உருவாகின.

6. சமூக மற்றும் கலாச்சார முன்னேற்றம்: கூடுதலான உணவு, அதிக மக்கள் ஆகியவற்றால் கல்வி, கலை, மதம் வளர்ச்சி. பண்டைய நாகரிகங்கள் விரைவாக முன்னேறியது.

இரும்பாலான ஏர் (Iron Ploughshare) என்பது ஒரு கருவி மட்டுமல்ல; அது மனித சமூகத்தின் வளர்ச்சியை மாற்றிய மிகப் பெரிய புரட்சியாகும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online