Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கோயில், வீட்டில் பூஜை செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

கோயில், வீட்டில் பூஜை செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Kalki Online 10 months ago

றை வழிபாட்டு முறை என்பது இந்துக்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே தொன்றுதொட்டு இருந்து வருகிறது. அப்படி இறைவனை கோயில்களிலோ அல்லது வீட்டிலோ வழிபடும்போது கடைபிடிக்க வேண்டிய சில முறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

* ஈரமான உலராத உடையை உடுத்திக்கொண்டு பூஜை, அர்ச்சனை போன்ற தெய்வ வழிபாட்டை செய்யக் கூடாது.

* விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது விளக்கின் எண்ணெயில் உள்ள தூசியை கைவிரலால் எடுக்கக் கூடாது.

* அபிஷேகம் செய்யும்போது இரும்பு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில் அபிஷேகத்திற்கு ஜலம் வைத்துக் கொள்ளக்கூடாது. பித்தளை மற்றும் வெள்ளி பாத்திரங்களில் வைத்துக் கொள்ளலாம்.

* தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலையையோ பாக்குகளையும் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வைக்கக் கூடாது. இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பத்து என இரட்டைப்படையில் இருக்க வேண்டும்.

ஆவணி மாதத்தில் இந்த விஷயங்களை செய்தால் நீங்கள் நினைத்தது உடனே நடக்கும்!

* வாழைப்பழத்தை பாதியாக வெட்டி அதன் மீது கற்பூரம் ஏற்றி வைத்து தீபாராதனை செய்வதோ அதன் மீது திரி போட்டு தீபம் ஏற்றுவதோ செய்யக் கூடாது.

* மணி அடிக்கும் ஓசை இல்லாமல் எந்த ஒரு பூஜையும் செய்யக் கூடாது.

* பூஜை செய்யும்போது தாமிர பாத்திரத்தில் சந்தனத்தை வைத்துக்கொள்ளக் கூடாது.

* அகல், சட்டி போன்ற மண் பாத்திரத்தில் பூஜைக்குரிய சந்தனத்தை வைக்கக் கூடாது.

* பூஜைக்கு உபயோகிக்கும் மணி, வெற்றிலை, அனைத்து வகையான பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸமித்துகள், வாழை இலை முதலியவற்றை பூமியில் தரையில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

* தாழம்பூவை கொண்டு சிவனுக்கு பூஜையும் அர்ச்சனையும் அலங்காரமும் செய்யக் கூடாது.

* வீட்டில் செய்யும் பஞ்சாயதன சிவ பூஜையின் முடிவில் சண்டிகேஸ்வரருக்கு பலி போடாமல் இருக்கக் கூடாது.

* மகாலட்சுமிக்கு தும்பை பூ கொண்டு அர்ச்சனை செய்யக் கூடாது.

* வில்வ இலையால் சூரியனை அர்ச்சனை செய்யக் கூடாது.

இந்த மந்திரத்தை தினசரி சொன்னால் போதும்: வாழ்வில் துன்பங்கள், தடைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும்!

* ஸ்ரீராமரையும் பெருமாளையும் பூஜிக்கும்போது பூ கிடைக்கவில்லை என்பதால் அட்சதை அரிசியால் அர்ச்சனை செய்யக் கூடாது.

* இரும்பு அல்லது எவர்சில்வரால் செய்யப்பட்ட விளக்குகளில் தெய்வத்தை ஆவாஹனம் செய்து பூஜை செய்யக் கூடாது.

* தலையை துணியால் மூடிக்கொண்டு எந்த ஒரு ஜபத்தையும் செய்யக் கூடாது. அதேபோல், இரு கைகளையும் துணியால் மறைத்து மூடிக்கொள்ளாமல் காயத்ரி ஜபத்தை செய்யக் கூடாது.

* துளசி செடியின் குச்சியை ஹோமம் செய்யும் நெருப்பில் போடக் கூடாது.

* திருக்கோயிலில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யும் நேரத்தில் பிரதட்சணம் செய்தல் கூடாது.

* கோயிலை ஒரு முறை மட்டும் பிரதட்சணம் செய்யக் கூடாது. குறைந்து மூன்று முறையாவது பிரதட்சணம் செய்ய வேண்டும்.

வீட்டிற்கு பாதுகாப்பு கவசம்: திருஷ்டி, பில்லி சூனியத்தை விரட்டும் பசுஞ்சாணம்!

* திருக்கோயில் மூடி இருக்கும் நேரத்திலும் திருவிழாவில் ஸ்வாமி வீதி உலா வரும் நேரத்திலும் உள்ளே திரை போட்டிருக்கும் நேரத்திலும் கோயிலில் உள்ள தெய்வத்தை தரிசனம் செய்வதோ பிரதட்சணம் செய்வதோ கூடாது.

* கோயில்களில் திருவிழா நடக்கும்போது, கொடியேற்றம் முதல் கொடியிறக்கம் வரை அதன் சுற்றுப்புறங்களில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது.

* ஒரு ஆலயத்தில் இருந்து கொண்டு மற்ற ஆலயத்தைப் பற்றி புகழ்ந்து பேசக் கூடாது.

* பெருமாள் கோயிலில் பிரசாதமாகத் தரப்படும் பூஜா தீர்த்தத்தையோ பொங்கலையோ சாப்பிட்டுவிட்டு கைகளை அலம்பக் கூடாது.

* கோயில்களில் பிரசாதமாகத் தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. காதுகளில் வைத்துக் கொள்ளலாம்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online