Dailyhunt
கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் பார்க்க வேண்டிய 7 இடங்கள்!

கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரில் பார்க்க வேண்டிய 7 இடங்கள்!

Kalki Online 1 year ago

ன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கும்பமேளா இந்த வருடம் பிரயாக்ராஜ் நகரில், நேற்று (13.1.2025) தொடங்கி, அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

கலாசார அடையாளமாகவும் வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் விளங்கும் பிரயாக்ராஜ் நகரில் பார்க்க வேண்டிய 7 இடங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. ஆனந்த் பவன்: வரலாற்று ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாக இருக்கும் ஆனந்த் பவன் நேரு-காந்தி குடும்பத்தின் மூதாதையர் வீடாகும். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தனது ஆரம்ப காலத்தை கழித்த வீடான இது, இப்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இது நேரு குடும்பத்தின் புகைப்படங்கள், ஆவணங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் மூலம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது.

2. அனுமன் மந்திர்: அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழைமையான மற்றும் மிகவும் மரியாதைக்குரிய கோயில்களில் ஒன்றான அனுமன் மந்திர், பிரயாக் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள ஹனுமன் சுயமாக வெளிப்பட்டதாக நம்பப்படுவதால் அனுமனின் தனித்துவமான சிலைக்கு புகழ் பெற்றதாகவும் முக்கிய ஆன்மிக ஈர்ப்பு தலமாகவும் விளங்குகிறது.

வண்ணமயமான காற்றாடிகளின் தோற்றமும் வரலாறும்!

3. அலகாபாத் கோட்டை: முகலாயப் பேரரசர் அக்பரால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தலைசிறந்த கட்டடப் படைப்பாகவும், வரலாற்று சிறப்புமிக்க கோட்டையாகவும் விளங்கும் அலகாபாத் கோட்டை பிரயாக்ராஜ் நகரில் உள்ளது. இந்தக் கோட்டை பாரசீக மற்றும் முகலாய பாணிகளை அழகாக எடுத்துக்காட்டுகிறது. உள்ளே, பாடல்புரி கோயிலில் புகழ் பெற்ற அக்ஷயவாட் மரத்தைக் காணலாம். இது அழியாதது எனவும் நம்பப்படுகிறது.

4. ஜவஹர் கோளரங்கம்: உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் அமைந்துள்ள அலகாபாத் கோளரங்கம் என்று அழைக்கப்படும் ஜவஹர் கோளரங்கம், அறிவியல் ஆர்வம் மற்றும் கற்றலை மேம்படுத்துவதற்காக 1979ல் திறக்கப்பட்டது. நேரு குடும்பத்தின் இல்லமான, ஆனந்த் பவனுக்கு அருகில் அமைந்துள்ள இந்த கோளரங்கம் அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமாகும்.

5. அசோக தூண்: மௌரிய வம்சத்தின் குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னமான அசோக தூண் அலகாபாத் கோட்டையில் அமைந்துள்ளது. பேரரசர் அசோகரின் ஆணைகளுடன் பொறிக்கப்பட்ட இது, இந்தியாவின் பாரம்பரிய அடையாளமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.

6. திரிவேணி சங்கமம்: கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், கும்பமேளாவின்போது மிகவும் பிரபலமான இடமாகும். ஆன்மாவை சுத்திகரித்து பாவங்களைக் கழுவுவதாக நம்பப்படும் புனித நீராடலுக்காக யாத்ரீகர்கள் நீராடுவதற்கு பெயர் பெற்ற இடமாக இது விளங்குகிறது.

தை திருநாளில் காப்பு கட்டும் பொங்கல் பூவின் சிறப்பு!

7. அலோபி தேவி கோயில்: பிரயாக்ராஜில் அதிகம் அறியப்படாத, ஆனால் குறிப்பிடத்தக்க இடமாக அலோபி தேவி கோயில் உள்ளது. திருவிழாவின்போது தேவியின் சிலை சங்கமத்திற்குக் கொண்டு செல்லப்படுவதால் இது கும்பமேளாவின்போது சிறப்பு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. இந்தக் கோயிலில் தேவியின் காலடி ஓசை கேட்பதாக புராணக்கதை கூறுகிறது.

பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு செல்பவர்கள் கண்டிப்பாக மேற்கூறிய ஏழு இடங்களையும் பார்ப்பது கூடுதல் பலன்களையும் மன நிறைவையும் கொடுக்கும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online