Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
குட்டிக்கதை: உலகில் அன்பு இருக்க என்ன காரணம்?

குட்டிக்கதை: உலகில் அன்பு இருக்க என்ன காரணம்?

Kalki Online 1 year ago

ருமுறை ஒரு அரசன் தன் ராஜ்ஜியத்திற்கு வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த முனிவரைச் சந்தித்தான். "ஓ ஸ்வாமி!

அழியாத் தன்மையை அளிக்கும் மூலிகையோ, மருந்தோ ஏதேனும் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்" என்று கேட்டார்.

அதற்கு முனிவர், "அரசே! தயவு செய்து உங்கள் எதிரில் உள்ள இரண்டு மலைகளைக் கடக்கவும். அங்கே, ஒரு ஏரியைக் காண்பீர்கள். அதன் நீரைக் குடியுங்கள், நீங்கள் அழியாமல் இருப்பீர்கள்" என்று பதிலளித்தார்.

இரண்டு மலைகளைக் கடந்ததும் அரசன் ஒரு ஏரியைக் கண்டான். அவர் தண்ணீர் குடிக்க முற்பட்டபோது, ​​வலிமிகுந்த முனகல் சத்தம் கேட்டது. ஒலியைத் தொடர்ந்து, மிகவும் பலவீனமான ஒரு மனிதன் வலியுடன் படுத்திருப்பதைக் கண்டான்.

அரசன் காரணம் கேட்டதற்கு, அந்த மனிதர், "ஏரியின் தண்ணீரைக் குடித்து அழியாதவனாக ஆனேன், எனக்கு நூறு வயது ஆனவுடன், என் மகன் என்னை வீட்டை விட்டுத்துரத்திவிட்டான், நான் கடந்த ஐம்பது வருடங்களாக இங்கேயே கிடக்கிறேன். என் மகன் இறந்துவிட்டான், இப்போது நான் சாப்பிடுவதையும் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்திவிட்டேன், இன்னும் நான் உயிருடன் இருக்கிறேன்.

"முதுமையோடு இறவாமையால் என்ன பயன், இறவாமையோடு இளமையும் பெற்றால் என்ன" என்று எண்ணினான் அரசன்.

அதற்குத் தீர்வு காண முனிவரிடம் திரும்பிச் சென்று, "நான் எப்படி அழியாமை மற்றும் இளமை இரண்டையும் பெறமுடியும் என்று எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டார்.

காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டிய 8 விஷயங்கள்!

முனிவர் பதிலளித்தார், "ஏரியைக் கடந்த பிறகு, நீங்கள் மற்றொரு மலையைக் காண்பீர்கள், அதைக் கடந்தால், மஞ்சள் பழங்கள் நிறைந்த ஒரு மரத்தைக் காண்பீர்கள், அவற்றில் ஒன்றை உண்ணுங்கள், நீங்கள் அழியாமை மற்றும் இளமை இரண்டும் பெறுவீர்கள்."

மன்னன் மற்றொரு மலையைக் கடந்து மஞ்சள் பழங்கள் நிறைந்த ஒரு மரத்தைக் கண்டான். அவர் ஒன்றைப் பறித்துச் சாப்பிடும்போது, ​​உரத்த வாக்குவாதங்களும் சண்டைகளும் கேட்டன. இவ்வளவு தூரமான இடத்தில் யாரால் சண்டை போட முடியும் என்று யோசித்தார்.

நான்கு இளைஞர்கள் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதைக் கண்டார். "ஏன் சண்டை போடுகிறீர்கள்?" என்று அரசன் கேட்டான்.

அவர்களில் ஒருவர், "எனக்கு 250 வயதாகிறது, என் வலதுபுறத்தில் உள்ளவருக்கு 300 வயது. அவர் எனக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை" என்று கூறினார்.

வலப்பக்கத்தில் இருந்தவரிடம் அரசன் கேட்டபோது, ​​"350 வயதாகியும் என் தந்தை இன்னும் உயிருடன் இருக்கிறார், எனக்குரிய பங்கைக் கொடுக்கவில்லை. என்னுடையதை என் மகனுக்கு எப்படிக் கொடுப்பது."

அந்த நபர் 400 வயதான தனது தந்தையை சுட்டிக்காட்டி, அதே புகாரைப் பகிர்ந்து கொண்டார். அவர்கள் அனைவரும் ராஜாவிடம், சொத்துக்காகத் தங்களுடைய முடிவில்லாத போராட்டம், கிராமவாசிகளை ஊரைவிட்டு வெளியேற்றத் தூண்டியது.

அதிர்ச்சியடைந்த மன்னன் முனிவரிடம் திரும்பி, "மரணத்தின் முக்கியத்துவத்தை எனக்குக் கற்றுக் கொடுத்ததற்கு நன்றி" என்றார்.

அப்போது முனிவர், "மரணம் இருப்பதால், உலகில் அன்பு இருக்கிறது" என்றார்.

உங்கள் நிம்மதி உங்கள் கைகளில்: உற்சாகமாக வாழ எளிய வழிகள்!

எல்லோரும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள், ஆனால் பிறப்பு மற்றும் இறப்பு என்பது படைப்பின் விதிகள். இது பிரபஞ்சத்தின் சமநிலைக்கு அவசியம். அது இல்லாமல் போனால், மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

மரணத்தைத் தவிர்க்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழுங்கள். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள், உலகம் மாறும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Kalki Online